இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday 5 July 2012

மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள்

மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் 



மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் 

தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால்  கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்களெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும்,அறம், பொருள், இன்பம்,என்ற மூன்று வகைப் பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும், என்ற  பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங் களையும்,கோட்பாடுகளையும்  வகுத்து சுவடிகளில் பதிப் பித்துள்ளனர்.

இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த,மிகவும் தேவையான இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம். 

1 -  மனைக்கு ஆகா விருட்சங்கள்
2 - இரவில் ஆகா போசனங்கள்

பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு 
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் 
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் 
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே 

குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி                                                        
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு 
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே 
                                அகத்தியர் புனசுருட்டு - 500

இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்  பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின் றனர்.மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம், வருவாய் இழப்பு, கடன் தொல்லை, மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனது கிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டி ருப்பார்கள்.எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனேஅகற்றி நலம் பெறுங்கள்.

மேற்கண்ட செடி , மரங்களின்  வகைகள் :
1.பருத்தி, 2.அகத்தி, 3.பனை, 4.நாவல், 5.அத்தி, 6.எருக்கு, 7.வெள்ளெருக்கு 8.புளியமரம், 9.கருவேலன், 10.முருங்கை, 11,கல்யாண முருங்கை, 12.கள்ளி 13.கருவூமத்தை, 14.இலவம்,15.வில்வம், 16.உருத்திராட்சம்,17.உதிரவேங்கை இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.

அடுத்து இரவில் ஆகாத உணவுகள் பற்றிய பாடல் :

இஞ்சிவெண்டயிர்இலைக்கறிபாகற்காய்                                             கொஞ்சுங்காட்டுக்கிளாக்காயருநெல்லி                                                         துஞ்சுமே புளியங்காய் துவையலும்                                                                  மிஞ்சு ராவில்லருந்தும் மனிதர்க்கு 

அஞ்சிலட்சுமி அகன்றுமே போய்விடும்
தஞ்சமாஞ் சேட்டை தன்னிலடைகு வாள்
எஞ்சில் துக்கமுமெய்திடுந் தப்பாது
கஞ்சனானை கருத்தாயுரைத்ததே 

மேற்கண்ட பாடலில் அகத்தியர் பெருமான் மிகத்தெளிவாக விளக்கம்  அளிக்கின்றார்.  


இரவில் விலக்க வேண்டிய உணவு வகைகள் : 

இஞ்சி -தயிர்- கீரை வகைகள்-பாகற்காய்-கிளாக்காய்-அருநெல்லி- மற்றும் புளிதுவையல் போன்றவற்றை இரவில் உண்பவர்களிடம் இருந்து மகாலட்சுமி பயந்து விலகுவாள். மற்றும் மூதேவி வந்து குடியேறுவாள். துக்கம் வரும் இறைவன் ஆணை என்கிறார்.

அறிவியல் பூர்வமாக பார்த்தாலும் மேற்கண்ட உணவு வகைகள் நமது உடலில் சுரக்கும் பித்த நீரை ஊக்குவிப் பவை மேலும் இரைப்பையில் சேதம்விளைவிக்கும். அதனால் குடற்புண்,நெஞ்சு எரிச்சல்,அஜீரணம் போன்றவைகளை தோற்றுவிக்கும்.

எனவே இவ்வகை உணவுகளை நீக்கி நலம் பெறுவோமே.

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549     



16 comments:

தேடல் said...

வணக்கம்.பதிவு அருமை.
தொடர்ந்து பார்த்து வருகிறேன்
என்றும் அன்புடன்
Nantha
Chennai

இமயகிரி சித்தர் said...

வணக்கம் நந்தா ஐயா !

மனிதகுலம் பயன் பெறவே சித்தர் பெருமக்கள் தங்கள் ஞானத்தால்
கண்டறிந்தவற்றை பல லட்சம் பாடல்களில் வடித்துள்ளனர்.
எண்ணிலடங்கா அந்த வாழ்வியல் தத்துவ பொக்கிசங்களை எடுத்து
கொடுக்க எம்மை போன்றோர் தயாராக உள்ளோம்.
உலகெங்குமுள்ள நம் தமிழறிந்தோர் பயன்பெறவே.!

எமது "சித்தர் பிரபஞ்சம்"வலை தளத்தை உங்கள் நண்பர்களுக்கும்
அறிமுகம் செய்யுங்கள்.மற்றும் உங்கள் கருத்துக்களையும் பதிவு
செய்யுங்கள் நன்றி.

இமயகிரி சித்தர்

கவிதை வானம் said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள் ......உணவை பற்றிய சித்தர்களின் வாக்கு நிஜம

இமயகிரி சித்தர் said...

பரிதி ஐயா வணக்கம் !

இது போன்ற அற்புத தகவல்கள் தொடர்ந்து வெளி வரும்
சென்ற மாத தொகுப்பில் ஏராளமான அனுபவ குறிப்புகள்
உள்ளது பார்வையிட்டு கருத்துக்களை கூறுங்கள் நன்றி

இமயகிரி சித்தர்...

blow lamp said...

அருமையான தகவல், வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்களையும், இரவில் சேர்க்கக் கூடாத உணவு வகைகளையும் தெரிந்துகொண்டேன். இது போன்று மனித வாழ்க்கைக்கு பயன்படும் பிற அறிய தகவல்களையும் பகிர்ந்து என்னை போன்றோர் பயன்பெற உதவுமாறு வேண்டுகிறேன்.
நன்றி ஐயா!

இமயகிரி சித்தர் said...

திரு சீனுவாசன் அவர்களே!

இது போன்ற அரிய சித்தர்களின் வாழ்வியல் விளக்கங்கள்
"சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் தொடர்ந்து வெளிவரும்.

இவ்வரிய சித்தர் தத்துவங்கள் உலகெங்கும் உள்ள தமிழ்
அறிந்தோர் அனைவரும் பயன் பெரும் நோக்கில் வெளியிட்டு
வருகின்றோம்.

உங்கள் நண்பர்களிடமும் எமது வலை தளத்தை அறிமுகம்
செய்யுங்கள் நன்றி!

இமயகிரி சித்தர்

Gnana Moorthy said...

நல்ல பதிவு. ரசமணி பற்றி உங்களிடம் தகவல் இருந்தால் பகிருங்கள். எங்கே உண்மையான ரசமணி கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.

இமயகிரி சித்தர் said...

இரசமணி பற்றிய ஆய்வுகள் மற்றும் விரிவான
விளக்கங்கள் வரும் பதிவில் பகிர்கின்றேன் நன்றி!

இமயகிரி சித்தர்...

Gnana Moorthy said...

பதிலுக்கு நன்றி!!

தேடல் said...

//பொக்கிசங்களை எடுத்து
கொடுக்க எம்மை போன்றோர் தயாராக உள்ளோம்//

நன்றி,

நந்தா

ram said...

நல்ல பதிவு. ரசமணி பற்றி உங்களிடம் தகவல் இருந்தால் பகிருங்கள். ரசமணி செய்யும் முறை பற்றிய விபரம் முழுமையாக தகவல் இதுவரை தெளிவாக தெரியவில்லை தகவல் இருந்தால் பகிருங்கள். நன்றாக இருக்கும். மிக்க நன்றி.

இமயகிரி சித்தர் said...

நண்பரே !

சித்தர்கள் ஞானத்தால் கண்டறிந்த அரிய கலைகளில்
"இரச மணி"யும் ஒன்று. இதை வைத்துதான் ஏராளமான
சித்திகள் அடைந்துள்ளனர்.

இருந்து பார் சூதத்தை எவ்வன்னத்தாலும்
இடுக்கினவன் தேவனடா ஆனால்
இடுக்கமில்லை
(யூகிமுனி சித்தர் பாடல்)

மேற்கண்ட பாடலின் படி சூதம் என்ற பாதரசத்தை எந்த
வகையிலாவது மணியாகக் கட்டியவன் தேவனுக்கு
ஒப்பானவன் என யூகிமுனி குறிப்பிடுகின்றார்.

சித்தர்கள் இது போன்ற அரிய கலைகளை குரு -சீட
வழிமுறைகளில் மட்டும் போத்தித்துள்ளனர்.எனவே
தான் தங்கள் நூல்களில் இவைகள் பற்றிய பாடல்களை
பரிபாஷை களில் வடித்துள்ளனர்.எனவே தக்கதொரு
குருவின் மூலம் இரசமணி செய்முறைகளை கற்றுக்
கொள்ள(குருமுறையில்) முயலுங்கள்.

இரசமணி பற்றிய பல்வேறு அதிசய தகவல்களை வரும்
பதிவுகளில் வெளியிடுகின்றோம்..நன்றி !

இமயகிரி சித்தர்...

PALANI said...

இரவில் தயிர் சதம் கடவுளுக்கு படைக்கலமா ?
இரவு கோயில்கள் மற்றும் கொலுபூஜையில் கொடுக்கப்படும் தயிர் கலந்த சாதங்கள் சாப்பிடலாமா ? தாழ்மையுடன் A.PALANI/TUTICORIN

Unknown said...

பயனுள்ள தகவல் நன்றி ஐயா

Unknown said...

வணக்கம் ஐயா, எனது வயது 24 . என்னால் இரவில் தூக்கம் வருவதற்கு தாமதமாகிறது. சில நேரங்களில் தூக்கம் வருவதற்கு ஆண்மையை இழக்க வேண்டியுள்ளது.ஆதலால் எனது உடல் மிகவும் மெலிந்து காணப்படுகிறது.தயை கூர்ந்து எனது வாழ்க்கையை நன்னெறி படுத்த மூலிகைகளின் குறிப்பை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Unknown said...

contents not possible to copy.

பதிவுகளின் வகைகள்