இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday 14 October 2017

டெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE

டெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE






இன்றைய சூழலில் நம்மைச்சுற்றியுள்ள மிகப்பெரிய பிரச்சினை டெங்குநோய்  ஆகும். இதனால் தினமும் பலர் இறக்கின்றார்கள் என்ற செய்தி தினசரி இதழ் களிலும், தொலைக்காட்சிகளிலும் வருவதைக்காண்கின்றோம். இதனைக்  கட்டுப்படுத்த நமது தமிழக அரசும் மிகவும் தீவிரமாக போராடி வருகின்றது. மேலும் டெங்கு நோய் உருவாகாமல் தடுப்பதற்கான விழிப் புணர்வு பிரச்சார மும் செய்து வருகின்றது.ஆனாலும் நோயின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

இயற்கை சுற்று சூழல் ஆர்வலர்கள் பலர் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கும் பட்டாசுகளினால் ஏற்படும் புகையினாலும், சப்தத்தினாலும்  பூமியில் மிகவும் மாசு ஏற்படுகின்றது என்று கூறுகின்றனர்.ஆனால் உண்மை என்னவென்றால் தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் மாசுவினால் மிகப்பெரிய நன்மையே உண்டாகின்றது  என்பது மிகப்பெரிய உண்மையா கும்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் சூட்சுமம் தீபாவளி பண்டிகையில் உள்ளது.

தீபாவளி பண்டிகை என்பது என்றோ இறந்து போன நரகாசுரனை அழித்ததன் நினைவாக கொண்டாடும் பண்டிகை அல்ல.ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட மாதங்களில் தோன்றி மனிதர்களை வாட்டி, வதைத்து மிகவும் துன்பத்தில் ஆழ்த்தும் நரகாசுரனை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அழிக்கும் பண்டிகைதான் தீபாவளி ஆகும். 

நரகாசுரன் என்பது நாம் புராணக்கதைகளில் படித்து தெரிந்துள்ள ஒரு அரக்கன் வடிவம் கொண்ட அசுரன் அல்ல.மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு, போன்ற வைரஸ் காய்ச்சலை மனிதர்களிடம் உருவாக்கும் கொசு க்கள்தான் என்பதே மாபெரும் அதிசய உண்மையாகும்.

இதன் விபரங்களை சென்ற 2012,ம் வருடத்திலேயே நமது சித்தர் பிரபஞ்சம் இணையதளத்தில் 2,பதிவுகளாக :-

தீபாவளி பண்டிகை  ஆன்மீக விளக்கம் – பாகம் -1

தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் 

என்ற தலைப்புகளில் மிகவும் விபரமாக பதிவு செய்துள்ளோம்.இந்த இரண்டு பதிவுகளிலும் ஏராளமான அரிய உண்மைகள் பதிவு செய்துள்ளோம்.

கொசு என்ற சிறு பூச்சி இனம் பலகோடி வருடங்களாக மனிதர்கள், மற்றும் விலங்குகளின் இரத்தத்தை குடித்து வாழ்ந்து வரும் இனமாகும்.கொசுக்களை அழிப்பது என்பது சாதாரண காரியமல்ல.கொசுவர்த்தி சுருள்களாலும்,திரவ மருந்துகளாலும்,புகை போடுவதாலும் இவை அழிவதில்லை.கொசுக்களை விரட்ட மட்டுமே பயன்படுகின்றது.கொசுக்களை அழிக்க பல்வேறு நாடுகளி லும் தீவிரமாக ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றது. 

தீபாவளி பண்டிகைக்கு, கொசுக்களை அழிப்பதற்கு மிகவும் பங்குண்டு என்பதை இப்போது பார்ப்போம்.

கொசுக்கள் உற்பத்தி ஆவதில் மூன்று கட்டங்கள் உள்ளது.
1,  முட்டை பருவம்
2, புழு பருவம்
3, கொசு பருவம் 

கொசு முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, கொசுவாக மாறுவதற்கு தண்ணீர், நீர் நிலைகள் தேவை.எனவே கொசுக்கள் தன் இனத்தைப் பெருக்குவதற்கு புரட்டாசி, ஐப்பசி போன்ற மழை காலங்களில் அங்காங்கே தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் முட்டை இடுகின்றது.பின்பு முட்டையிலிருந்து புழுவாகி, பின்பு இறக்கை முளைத்து கொசுவாக மாறுகின்றது.

1, ஐப்பசி மாதத்தில் பெய்த மழைநீரில் மற்றும் சாக்கடை நீர் நிலைகளில் கொசு இட்டுள்ள முட்டைகள்  பட்டாசு, வெடிகளால் ஏற்படும் சப்தத்தினால் அதிர்ச்சி ஏற்பட்டு முட்டை பருவ கொசுக்கள் அழிகின்றன.

2, வெடியில் உள்ள கந்தகம், வெடியுப்பு, அலுமினியம் போன்ற வெடி மருந்துகளுடன் சுற்றப்பட்ட காகிதங்கள்   வெடிகள் வெடித்தவுடன் நாலாபுற மும்  சிதறி சாக்கடை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரில்  வெடி மருந்து தன்மையுடன் காகிதங்கள் கலந்து புழு பருவ கொசுக்கள் அழிகின் றன.

3, புஸ்வானம், சங்குசக்கரம், கம்பிமத்தாப்பு, மற்றும் வெடிகள் வெடித்தவுடன் வெளியேறும் புகைகளினால் வீடுகளிலும், வீட்டை சுற்றியுள்ள செடி,கொடி,மரங்களில் மற்றும் மறைவான இடங்களில் மறைந்துள்ள கொசுக்கள் மடிகின்றன. இவ்வகை வெடிமருந்து புகையினால் மட்டுமே கொசுக்கள் இறக்கின்றன என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய பின்பு அந்தப் பகுதிகளில் "கொசுக்கள் மற்றும் பூஞ்சைகள்" அழிந்து,அதன் தாக்கம் குறைந்து இவைகளால் ஏற்படும் நோய்களின் கொடுமையும் வெகுவாக குறைந்திருப்பதை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும்

பாகம் -1 to 3  - இந்த மூன்று பாகங்களையும் ஆழ்ந்து கவனித்துப் படித்து இதில் கூறிய முறைகளின் படி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து ஆரோக்யமாக வாழ வேண்டுமென "சித்தர் பிரபஞ்சம்" இணைய தளம் சார்பாக இறைவனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் வேண்டி வாழ்த்துகின்றோம். 


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு இந்தியா

செல் :9865430235  9095590855 – 9655688786 – 8695455549 

Thursday 6 July 2017

பருவகால நோயாக மாறிய வாந்தி, பேதியும். எளிமையாக மீண்டு வர, அனுபவ சித்தா மூலிகை மருந்துகளும் – Vomiting – Diarrhea

 பருவகால நோயாக மாறிய வாந்தி, பேதியும். எளிமையாக மீண்டு வர, அனுபவ சித்தா மூலிகை மருந்துகளும் – Vomiting – Diarrhea







நாம் வாழும் பூமியில் இயற்கையாய் நடைபெற வேண்டிய பருவ காலங்களில் வெயில், காற்று, மழை,பனி போன்றவைகள் முறையாக  நடைபெறாமல் மனிதனின் சுயநலத்தினாலும், பேராசையினாலும் இயற்கை வளங்கள் அளிக்கப்படுவதால் பருவங்கள் முறைதவறி நடைபெறுகின்றது.இதனால் மனிதர்களிடமும், விலங்குகளிடமும் புதுவிதமான வியாதிகள் தோன்று கின்றன.

இதில் குறிப்பாக கோடைகாலங்களில் மட்டும் மனிதர்களை பெரும் பான்மையாக வாட்டி வதைக்கும் நோய்களான வியர்க்குரு, அக்கி, அம்மை, கொப்புளம், விடாத சுரம், சிக்குன்குனியா, டெங்கு சுரம், மலேரியா போன்றவைகளினால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இது போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நோய்களிலிருந்து எளிதில் மீண்டுவரவும் மூலிகை மருந்துகளும், சித்த மருந்துகளும் பெரிதும் உதவுகின்றது.என்பது காலமறிந்த உண்மை.   

சென்ற  2006,ம் வருடத்தில் தமிழக மக்களை பெரிதும் பாதிப்புக்குள் ளாக்கிய சிக்குன்குனியா என்னும் மூட்டுவாத சுரத்தைப் போக்க  9,வகை யான மூலிகைகள் கலந்த சித்த மருத்துவமுறை சூரணமான “நிலவேம்பு குடிநீர்” பெரிதும் உதவியது.

இதனை உணர்ந்த நம் தமிழகஅரசும், நிலவேம்பு குடிநீரைப்பற்றி தொலைகாட்சி வாயிலாகவும், அரசுமருத்துவமனைகள் மூலமாகவும். மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலமாக சிக்குன்குனியா நோயினால் பாதித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலவேம்பு குடிநீர் கசாயத்தினால் மிக எளிதாக மீண்டு வந்தனர்.

இதேபோல் 2012,ம் ஆண்டு மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கிய உயிர்க்கொல்லி நோயான டெங்கு காய்ச்சல் நோய்க்கு பப்பாளி இலைச்சாறு மிகப்பெரிய அளவில் உதவியது.இதன் மூலம் டெங்கு சுரத்தால் பாதித்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மிக எளிதில் குணமடைந்தனர்.பப்பாளி இலைச்சாறு பற்றிய உண்மைகளை 2012,ம் ஆண்டில் நமது “சித்தர் பிரபஞ்சம்” வலைப்பூவில் மிக விபரமாக 2,பாகமாக வெளியிட்டிருந்தோம்.

தற்போது 2017,ம் வருடத்தில் மழைநீர் சரிவர பெய்யாததால் கோடைகால நோயாக வாந்தி, பேதி, காய்ச்சல் உருவெடுத்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதன் பாதிப்பு பரவலாக உள்ளது.

இன்றைய சூழலில் வாந்தி பேதியினால் பாதித்த நபர்களுக்கு உண்ட உணவுகள் சீரணமாகாமல், அஜீரணமாக மாறி [Food Poison] உணவு நஞ்சாக மாறி வாந்தி, பேதி, காய்ச்சல் உண்டாவதாக மருத்துவர்கள் நினைக்கின்றனர்.ஆனால் உண்மை அதுவல்ல. இது பருவகால சூழலால் ஏற்படும் நோய் என்பதை அனைவரும் உணரவில்லை என்பதே உண்மை.கோடைகால வெப்பத்தினால் உடலில் வாத, பித்த, கபம் என்ற மூன்று நாடிநிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் வாந்தி, பேதி, காய்ச்சல் உண்டாகின்றது.

வாந்தி, பேதி, காய்ச்சலை குணமாக்கும் அனுபவ சித்த மருத்துவ முறைகள் :

வாந்தியை நிறுத்தும் மருந்து :

மயில் இறகை நெருப்பில் சுட்டு கருக்கி திரிகடி அளவு எடுத்து தேன் ஒரு ஸ்பூன் அளவு இரண்டையும் குழைத்து 3,வேளை சாப்பிடவும். வாந்தி வருவது நிற்கும். அல்லது நாட்டுமருந்து கடைகள் மற்றும் சித்தா மருந்து கடைகளில் “மயிலிரகாதி சூரணம்” என்ற பெயரில் சூரணம் கிடைக்கும்.இதனை கால் டீஸ்பூன் அளவு எடுத்து தேன் ஒரு ஸ்பூன் அளவு இரண்டையும் குழைத்து சாப்பிடவும். இது போல் மூன்று வேளை சாப்பிட வாந்தி வருவது நிற்கும்.


வாயிற்று கோளாறை சரி செய்ய : Stomach  Infection 

விரலி மஞ்சள் - ஒரு துண்டு அளவு [ 2, இன்ச் அளவு]
ஓமம் -   ஒரு டீஸ்பூன் அளவு
தேன் – 2, டீஸ்பூன் அளவு
விரலி மஞ்சளை எண்ணெய் தீப விளக்கில் காட்டி எரித்து சுட்டு கரியாக்கவும்.இதனை பொடித்து இதனுடன் ஓமத்தையும் அரைத்து தேனில் குழைத்து சாப்பிட வயிற்றில் உள்ள உணவு நஞ்சுகள் வெளியேறும்.

இதில் குறிப்பிட்டுள்ள அளவு பெரியவர்களுக்கு.சிறியவர்களுக்கு இதில் பாதி அளவு கொடுக்கலாம்.

பேதி, கழிச்சல் , வயிற்றோட்டம் குணமாக :

சுண்டை வற்றல் சூரணம் செய்முறை :
உப்பில் ஊற வைக்காத சுண்டைவற்றல், ஓமம்,  வெந்தயம், நெல்லிவற்றல், மாங்கொட்டை பருப்பு, கருவேப்பிலை, மாதுளை   ஓடு, இந்த 7,வகையும் சம அளவில் எடுத்து இளம் வறுப்பாக வறுத்து இடித்து தூள் செய்யவும்.  

இதனை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் மோரில் கலந்து காலை, மாலை இரண்டு வேளை குடித்துவர பேதி, செரியாக் கழிச்சல்  குணமாகும்.

வாந்தி பேதியினால் உண்டாகும் காய்ச்சலுக்கு :
நிலவேம்பு குடிநீர் சூரணம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி அரை தம்ளர் அளவு கசாயம் வற்றியவுடன் வடிகட்டி குடிக்கவும்.இது போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர அனைத்து வகையான வைரஸ் காய்ச்சலும் குணமாகும்.

கவனிக்க :
நிலவேம்பு குடிநீர் சூரணம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு, பேய்ப்புடல், விலாமிச்சைவேர், சந்தனத் தூள், பற்படாகம் என்ற ஒன்பது வகை மூலிகை மருந்துகள் ஒன்று சேர்ந்தவை ஆகும். [ தனி நிலவேம்பு பொடி மட்டும் அல்ல ] 

2006,ம் வருடத்தில் மதுரை  சித்த வைத்திய சங்கத்தில்” மேற்கண்ட நிலவேம்பு குடிநீர் செய்முறையில் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகை மருந்துகளுடன்  பாரம்பரிய சித்த மருத்துவர்களின் அனுபவ முறையாக மேலும் இரண்டு முக்கியமான மூலிகைகள் சேர்த்து நோயாளர்களுக்கு கொடுத்தோம். தினமும் 600,லிருந்து  700,பேர் வரை மருந்துகள் வாங்கிச் செல்வார்கள்.  அனைவரும் மூன்றே நாட்களில் ஆறு வேளை மருந்தில் சிக்குன் குனியா நோயிலிருந்து பூரணமாக குணமடைந்தனர்.என்பது குறிப்பிடத்த க்கது.



நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம் – [ சஞ்சீவிமலை ]
சிறுமலை புதூர், சிறுமலை,
திண்டுக்கல் – 624003
தமிழ்நாடு – இந்தியா

சித்தர் வேதா குருகுலம்
22,புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் – P.O
திருச்சி – 620006

Cell : 9865430235 – 9095590855 – 9655688786 – 8695455549
Face book : imayagiri siddhar 
       

பதிவுகளின் வகைகள்