இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday 17 December 2012

விஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever

விஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever





விஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever

வைத்திய மாமேதை,சித்த மருத்துவர் :S.அழகு இளமாறன் , மதுரை

அவர்களின் 55-வருட மருத்துவ சேவையைப் பாராட்டி கவுரவிக்கும் 

விதமாய் "வாழ்நாள் சாதனையாளர் விருது"தஞ்சையில் 14-12-2012,

அன்று வழங்கப்பட்டது.இவ்விழாவின் போது விஷக் காய்ச்சலுக்கான

அனுபவ மருந்துகளை விளக்கம் அளித்தார் .


அதன் வீடியோ பதிவு இது.









நன்றி !
இமயகிரி சித்தர் ...
www.siddharprapanjam.org
mail:siddharprapanjam@gmail.com
cell no:8695455549



Monday 10 December 2012

நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal

நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1

நத்தைச் சூரி - பெண்- இனம் -கொல்லிமலை





ஒரிஜினல் நத்தைச் சூரி




நத்தைசூரி இது ஒரு மூலிகை.இதனை எப்படி கண்டுபிடிப்பது இதன் உண்மையான பெயர் என்ன?இதற்கு தாருணி,குழிமிடான் என பெயர்கள் இருக்கு...சிரியநங்கை என்ற மூலிக்கும் தாருணி என்ற பெயர் இருக்கு.இதில் தான் குழப்பம்.இதனை சித்தர்கள் எது நத்தைசூரி என்று கூறினார்கள் "மச்சமுனி" இணைய தளம்( தாதார )என்று ஒரு செடி அதனை நத்தைசூரி என்று நிருபணம் செய்து புகை படம் காட்டிஇருகாங்க.இமயகிரி அய்யா நத்தைசூரி என்று "சித்தர் பிரபஞ்சம்"இணைய தளத்தில் (நீங்கள்) வேறு புகைப்படம் காட்டி இருக்கின்றீர்கள்.மேலும் "சித்தர் களஞ்சியம்"இணையத்தளம் அதில் நத்தைசூரி என்று வேறு புகைப்படம் இருக்கு இதனை தெளிவாகக் கூறும்படி வேண்டுகிறேன்...ஏன் என்றால் காயகல்பம் சாப்பிட முடியாதவர்கள் நத்தைசூரியை சாப்பிடட்டும்.எனவே அய்யா நீங்கள் மனம் கோணாமல் இதனை கூறும்படி வேண்டுகிறேன்.

நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1

ஜீவ ராசு என்ற அன்பர் நமது "சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் மேற்க்கண்ட விபரங்கள் பதிவு செய்து "நத்தைச் சூரி"மூலிகையினைப் பற்றி  விளக்கங்கள் கேட்டிருந்தார்.முன்பு ஒரு பதிவில் மதுரை யிலிருந்து - .G.P கௌதம் என்ற அன்பரும் இதனைப் பற்றி கேட்டிருந்தார்.
       
சித்தர்கள் கண்டறிந்த அதிசய மூலிகைகளில் ஒன்றுதான் நத்தைச்சூரி ஆகும்.இம் மூலிகை மருத்துவப் பயன்பாட்டிற்கும்,அதிசய ஜாலங்கள்,மற்றும் சித்துக்கள் செய்வதற்கு உதவும் மூலிகையாகும்.

நத்தைச் சூரியின் வேறு பெயர்கள் :-
கடுகம், குழி மீட்டான், சூரி,தாருணி, தொலியா கரம்பை, நத்தை சுண்டி 

பொதுவாக இம் மூலிகையின் மகத்துவம் பற்றி கூறும் போது "எதைச் சொன்னாலும் செய்யும் நத்தைச்சூரி"எனும் அடை மொழி இதற்கு உண்டு.இம் மூலிகையின் இரகசிய செய்முறை விளக்கங்கள் குரு சீட பாரம்பரிய முறையில் தொன்று தொட்டு வந்துள்ளது.

நத்தைச்சூரி மூலிகையில் இரண்டு வகை உண்டு. ஒன்று "நத்தைச்சூரி" மற்றொன்று "நத்தை வராளி"இம்மூலிகை இரண்டிற்கும் வெவ்வேறு குணம் உண்டு.இதனைப் பரீட்சை செய்வது எப்படி என்றால் நத்தைச்சூரி மூலிகையின் சாற்றைப் பிழிந்து ஒரு நத்தையின் மேல் ஊற்றினால் நத்தையின் ஓடு சூரையிட்டது போல் தெறித்து உடைந்து விடும்.நத்தை வராளியின் சாற்றைப் பிழிந்து நத்தையின் மேல் ஊற்றினால் நத்தையின் ஓடு மட்டும் கழன்று விழும்.

மேற்கண்ட பரீட்சை இல்லாமல் இம்மூலிகைகளை நத்தையின் அருகில் காற்று வாட்டத்தில் வைத்தாலும் நத்தையின் ஓடு கழன்று,தெறித்து விடும்.இம் மூலிகையில் ஆண்,பெண் இனமும் உண்டு.இப் பரீட்சைகள்தான் இம் மூலிகையின் உண்மைத் தன்மையை கண்டறிய உதவுபவை.

கடந்த  சித்ரா பெளர்ணமி அன்று கொல்லிமலை யில் அதிசய மூலிகைகள் கண்டறியும் சிறப்பு பயிற்சிக்கு சித்த மருத்துவர்கள்,ஆய்வாளர்கள் -60,பேர்களை  அழைத்துச் சென்று இருந்தோம்.அதில் பல்வேறு அதிசய மூலிகைகளை கண்டறிந்து வீடியோ பதிவுகள் செய்து 3-பாகங்களாக வெளியிட்டுள் ளோம்.அதில் ஓரிடத்தில் "நத்தைச் சூரி - பெண்" இனம் ஒன்றைக்கண்டோம்.  அந்த மூலிகையைச் சுற்றி ஏராளமான நத்தை ஓடுகள் சிதறிக் கிடந்தன.அதைச்சுற்றிலும் உள்ள வேறு மூலிகைகளில் நத்தை ஓடுகள் இல்லை.அதனை அனைவரும் அதிசயமாகக் கண்டனர்.
அந்த மூலிகை மேலே உள்ள படத்தில் உள்ளது.
    
நத்தையின் ஓடுகளை சூரையிடுவதால் நத்தைச்சூரி என்று பெயர் வரக்காரணம் என கூறுவர்.எனது குரு வழி உபதேசத்தில் ஆசான் வேறு ஒரு விளக்கம் அளித்திருந்தார்.சூரி என்பது கத்தி என அர்த்தமாகும்."சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் முந்தைய ஒரு பதிவில் "ஒரிஜினல் நத்தைச் சூரி "என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தோம்.இந்த மூலிகையின் இலைகளின் நடுவே காலி பிளவர் போன்று பூ மொட்டு இருக்கும்.இந்த மொட்டில் சூரி எனப்படும் கத்தியைப் போன்று நிறைய முட்கள் இருக்கின்றது.நமது உள்ளங்கையின் பின்புறம் திருப்பி இந்த பூவின் மொட்டு மீது வைக்க நிறைய ஊசிகள் குத்துவது போல் இருக்கும்.இந்த நத்தைச் சூரியை ஒரு சிலர் மாந்திரீகம்,ஜாலங்களுக்கு இரகசியமாய்க் கையாண்டு வருகின்றனர்.

நத்தைச்சூரி மூலிகையால் மாயாஜால வித்தை  செய்யும் முறை

ஆதி வாரம்  சுவாதி நட்சத்திரம்  கும்ப லக்கினம் இம்மூன்றும் கூடிய தினத்தில் தனது பட்சி அரசு வேளை  இருக்கும் போது மூலிகையைச் சுற்றிலும் சுத்தி செய்து முறைப்படி "கன்னி நூல் காப்புக் கட்டி" "சாப நிவர்த்தி" செய்து "உயிர் கொடுத்து"பொங்கலிட்டு, பலி கொடுத்து தூப தீபங்காட்டி வந்து விடவும்.

அடுத்த ஆதி வாரம் (ஞாயிற்றுக் கிழமை) சிம்ம லக்கினத்தில் சென்று மறுபடியும் தூப தீபம் பொங்கல் பூஜை செய்து மரக்கொம்பினால் கிளறி ஆணிவேர் அறாமல் பிடுங்கி வந்து ஒரு பொன்னினால் செய்த கடயத்தில் (வளையத்தில்)அடைத்து விநாயகர் முன் வைத்துப் பூஜை செய்து எடுத்து கையில் மாட்டிக் கொண்டு ஒரு இரும்புக் குண்டைக் கையில் எடுத்து ஆகாயத்தில் விட்டெறிந்து கையில் போட்டிருக்கும் கடயத்தை கழட்டி இடது கையில் பிடித்து பூமியை நோக்கி தாழ்த்திப் பிடிக்க இரும்புக் குண்டு கீழே விழாமல் ஆகாயத்திலேயே நிற்கும்.பின்பு மேலே உள்ள குண்டை நோக்கி வளையத்தைக் காண்பிக்க கீழே விழும்.

இதனையே கடிக்க வரும் ஒரு நாயை நோக்கிக் காண்பிக்க அடங்கி ஒடுங்கி ஸ்தம்பிக்கும்.
இது கையில் இருக்கும் வரை எதிரிகள் எதிர்க்காமல் அடங்கி இருப்பார்கள்.அஷ்ட கர்மத்தில் இது ஒரு தம்பன மூலிகையாகும்.

கண்ணில் மணல் கொட்டும் ஜாலம் 
நத்தைச் சூரி மூலிகையின் வேரை மேற்கண்டவாறு பறித்து வாயிலிட்டு மென்று அடக்கிக்கொண்டு மணலைக் கண்களில் கொட்டிகொண்டால் கண்ணறுகாது.பாதிக்காது.   

நத்தைச் சூரியின் மருத்துவ விளக்கங்கள் பாகம் - 2-ல்  வெளியிடுகிறோம்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org
siddharprapanjam@gmail.com
        


        



Sunday 25 November 2012

புல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam

புல்லாமணக்கு மூலிகை  வசியம்-  Pullamanakku Herbal Vasiyam







புல்லாமணக்கு மூலிகை  வசியம்-  Pullamanakku Herbal Vasiyam

சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ  மூலிகைகளில் ஒன்றுதான் புல்லாமணக்கு எனும் அதிசய மூலிகையாகும்.இது பல்வேறு வகையான வசியம் செய்ய உத வுகின்றது.

இம் மூலிகையினைக் கொண்டு ஆண் வசியம், பெண் வசியம், தூப வசியம், (புகை),  வசிய மை, வசிய ஈடு, ஈடு மருந்து முறிவு,போன்ற ஏராளமான வசிய வேலைகளுக்கு மாந்திரீகவாதிகள் காலம் காலமாக பரம ரகசியமாக கையா ண்டு வருகின்றனர்.

இன்றும் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் இதனைப்பயன்படுத்துபவர்கள்  பரவலாக உள்ளனர்.

இம்மூலிகையின் பயன்பாடுகள் பற்றி சித்தர் நூல்கள், மாந்திரீகம்,மாயாஜால வித்தைகள் போன்ற நூல்களில் உள்ளது.என்றாலும் இதனை அனுபவ முறையில் கையாண்டு வெற்றி பெற நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.இதனை அனைவரும் அறிந்து கொள்ளும்  ஒரு அரிய தகவலாகவே பதிவு செய்கின்றோம். மேலும் இம்முறைகளை  கையாள விரும்புபவர்கள் சுயநலத்திற்கு என்றில்லாமல் பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகிறோம்.

வசிய தூபம் முறை 

1-நிலம்புரண்டி வேர் 2-புல்லாமணக்கு கிழங்கு 3-தொட்டால் வாடி வேர் 4-தொட்டால் சுருங்கி வேர் இவைகளை அம்மியில் இட்டு "பேய் கரும்பு"சாறு விட்டு  5 மணி நேரம் அரைத்து கடலை பிரமாணம்   அளவு உருட்டி காய வைத்து பாட்டலில் பதனம் செய்யவும்.இதை வேண்டும் போது ஒரு உருண்டை எடுத்து சாம்பிராணி கொஞ்சம் சேர்த்து தூபமாக(புகையாக)போட்டால் புகை பட்டவர்கள் எல்லாம் வசியமாவர்கள்.

ஆண், பெண் வசிய ஈடு மருந்து

1-சுழல் வண்டு  -42 -குளியானை -33 -இந்திரகோபம் -104 –புல்லாமணக்கு கிழங்கு -55 -கோவை விதை -106 -பொன்னூமத்தை விதை -307 –தகரை விதை -108 -தொட்டால் வாடி வேர் -39 -மருளூமத்தை விதை -5 இவை களை அம்மியில் இட்டு பேய்க் கரும்புச் சாறு விட்டு 10-மணி நேரம் அரை த்து குன்றிமணி பிரமாணம் குளிகை செய்து உலர்த்தி ஒரு பாட்டலில் பதனம் செய்யவும்.வேண்டும் போது ஒரு குளிகை எடுத்து தனது ரத்தம் சேர்த்து தின் பண்டங்களில் கலந்து கொடுக்க வசியம் ஆவர். இணைபிரியாத தம்பதிகளா வார்கள்.

வசிய ஈடு மருந்து முறிவு 

சுயநலத்தின் காரணமாக ஒருவரின் பிடியில் வசிய மருந்தினால் உள்ளஒருவரை அதன் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டுவரவும் இம் மூலிகை "புல்லாமணக்கு"உதவுகின்றது.

புல்லாமணக்கு கிழங்கு மூன்று எடுத்து நெய் விட்டு வறுத்து உண்ணவும்.இது போல் மூன்று நாள் காலை மாலை ஆறு வேளை சாப்பிட ஈடு மருந்தின் வேகம்முறிந்து தனது சுயநிலையை அடைவார்கள்.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
No, 22, பாரத் கார்டன்,
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T – 624003
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 - 9655688786







Sunday 11 November 2012

தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali-2

தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் 







இந்தியா முழுவதிலும்  அனைத்து மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.மேலும் பல நாடுகளிலும் கூட கொண்டாடப் படுகின்றது.

தீபாவளிப் பண்டிகை புராணங்களில் கூறப்படும் "நரகாசுர வதம்"என்பதற்கு மட்டுமல்லாமல்,மகா லட்சுமி அவதரித்த தினமாகவும்,குபேரன் சிவபெரு மானை வழிபட்டு சித்தி அடைந்த தினமாகவும், இமாச்சலத்தில் கோ பூஜை யும்,உத்திரப்பிரதேசத்தில் அன்னபூரணி வழிபாடும்,வங்காளத்தில் தாம்பூல திருவிழா ,துர்கா பூஜாவாகவும்,குஜராத்தில் குபேர பூஜையாகவும், மும்பை யில் லட்சுமி பூஜையாகவும் கொண்டாடப் படுகின்றது.

பொதுவாக நமது இந்து மத புராணங்களிலும்,இதிகாசங்களிலும்  அரக்கர் கள்,அசுரர்கள் வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பிடுகிறார்கள் அவர்களின் தோற்றமும் உருவமும் மிகப் பிரமாண்டமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள் ளனர். இக்கருத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கும்.

உண்மை என்னவென்றால் மனிதகுலத்தின்,மக்களின் நல்வாழ்விற்கு தீங்கு விளைவிப்பவைகள்  எதுவோ அதைத்தான் அசுரன்,அரக்கன் எனக் குறிப்பி ட்டுள்ளனர்.

இப்போது தீபாவளியைப் பற்றி விளக்கங்களைப் பார்ப்போம்.மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்க ளில் ஒன்றான வராக அவதாரத்தில் தோன் றிய  ஒரு அசுரனை பல்லாயிரம் வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண அவதாரத் தில் தான் அழித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.இக்கருத்தில் ஒரு மிகப்பெரிய உண்மை உள்ளது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா  நரகாசுனை அழித்ததைக் கொண்டாடும் விழாவே  தீபாவளி என நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.உண்மை அதுவல்ல ஒவ்வொரு வருடமும் மக்கள் குலத்தை பெரும் துன்பத்தில் ஆழ்த்தும் நரகாசுரனை அழிக்கும் விழாவே தீபாவளி ஆகும்.

நரகாசுரன் விளக்கம் :-  நரக - கொடிய  + அசுரன் - வேதனைஅளிப்பவன் 

நரகாசுரன் வேறு விளக்கம் :- நரன் - மனிதன் +அசுரன் - கொடுமை செய்பவன் 

எனவே மனிதர்களுக்கு கொடும் துன்பம் செய்பவைகளை அரக்கன்,அசுரன் என வர்ணித்துள்ளனர்.

இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு நம் இனத்தினரை பெரும் துன்பங்களுக்கு உட்படுத்தி கொடுமை செய்து கொண்டிருக்கும் கொடிய அசுரனான "நரகாசுரனை"  உங்களால் அறிந்து கொள்ள முடிகின்றதா ?நரகாசுரன் வேறு யாருமல்ல "கொசுக்கள்"தான்.இது வேடிக்கையாக சொல்லப்படும் கருத்தல்ல.மிகப்பெரிய உண்மையும் அதுதான்.பாகம் -1-ல் உள்ள புராணக்கதையை படித்து அதன் உள்அர்த்தத்தை ஆழ்ந்து கவனியு ங்கள் உண்மை விளங்கும்.

இன்று அரசாங்கமும் இந்த அசுரனை அழிப்பதற்காகவும்,இவனால் மக்களு க்கு ஏற்படும் துன்பங்களை போக்கவும் பல இலட்சக்கணக்காக பணம் செலவழித்து மக்களுக்கான விழிப்புணர்வும்,டெங்கு,மற்றும் வைரஸ் நோய்க ளைப் போக்க மருந்துகளும் அளித்து வருகின்றது.

இது போன்ற பருவகால கொடிய  நோய்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நம் முன்னோர்களால் நமக்கு நாமே திட்டமாக தோற்றுவிக்கப்பட்டதுதான் தீபாவளித் திருநாள்.   

பருவ காலங்களில் ஒன்றான "ஐப்பசியில் அடைமழை" எனும் இம்மாதத்தில் தான் கொடிய நோய்களான மலேரியாடெங்கு, சிக்குன் குனியா,வைரஸ் காய்ச்சல் மற்றும் மழை கால நோய்கள் போன்றவைகளுக்கு மக்கள் பெருவாரியான துன்பங்களுக்கு ஆட்பட்டு உயிர் இழக்கும் அபாயத்திற்கு ஆளாகின்றனர்.

ஐப்பசி மாதத்தில் பெய்யும் தொடர் மழையால் வீட்டின் சுவர்ப்பகுதியிலும், வீட்டின் உட்புறங் களிலும்,ஏராளமான் பூஞ்சைகள் தோன்றி படிந்திருக்கும், இவை நாம் உடுத்தும் துணிகளிலும் படிந்து அதன் மூலம் உடலின் தோல் பகுதிகளில் படிந்து வைரஸ் நோய்களை தோற்றுவிக்கும்.

மேலும் மழை பெய்து தேங்கிய நீரில் கொடிய நோய்களைத் தோற்றுவிக்கும் பல்வேறு வகை கொசுக்கள் உற்பத்தியாகும்.இவைகளைத் தான் "அசுர சக்தி"எனக்குறிப்பிட்டு இவைகளை அழித்தால் தான் மனித குலம் நிம்மதியா கவும், சந்தோசமாகவும் வாழமுடியும் என்பதால் இவைகளை அழிக்கும் சூட்சுமத்தைக் கொண்ட ஒரு விழாவாக, தீபாவளி பண்டிகையை நம் முன்னோர்கள் வடிவமைத்தனர்.


இதற்கு மூன்று வகையான சுத்திகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்தனர்.
1 - உடல் சுத்திகரிப்பு 
2 - வசிக்கும் வீடு  சுத்திகரிப்பு 
3 - நம்மை சுற்றியுள்ள பகுதிகள் சுத்திகரிப்பு 

உடல் சுத்திகரிப்பு :- எண்ணைக் குளியல் 
உடல் சுத்திகரிக்க நாம் முதல் பாகத்தில் குறிப்பிட்ட "மிளகு தைலம்"தேய்த்து வெந்நீரில் குளித்தல் இதனால் உடலில் தோல் பகுதிகளில் தோற்று நோய் பூஞ்சைகளை நீக்கி,தோலில் இரத்த ஓட்டத்தை சீர்படச் செய்கின்றது. உடலை எப்படி முறையாக சுத்திகரிக்க வேண்டுமென பாகம் -1ல் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளோம்.  

வசிக்கும் வீடு சுத்திகரிப்பு :- அகல் தீபம் 
தீபாவளி எனும் சொல் "தீப - ஆவளி"  என்ற இரண்டு வார்த்தைகள் இணைந் தது.ஆவளி என்றால் வரிசை, வரிசையாக தீபங்களை ஏற்றி வழிபடுதல் ஆகும்.

நிறைய அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வீடு முழுக்க வைத்தல்.இதனால் ஏற்படும் வெப்பம், ஒளியினால் வீட்டிலுள்ள  பூஞ்சைகள் அழிகின்றன.இதை நீங்கள் அனுபவப் பூர்வ மாகவே உணரலாம்.மழை காலங்களில் வீட்டினுள் துணிகளில்,சுவர்களில் ஒரு துர்வாசனை இருக்கும் போது நிறைய எண்ணை தீபங்களை வீட்டின் அறைகளில் வைத்துப் பாருங்கள் துர்வாசனை அகன்று விடும்.

நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் சுத்திகரிப்பு :- பட்டாசு ,வெடி வெடித்தல் 
பட்டாசுகள்,வெடிகளின் மூலமாக போன்றவைகள் மூலமாக அதாவது வெடிப்பொருட்களில் உள்ள மருந்துகளான வெடியுப்பு,கந்தகம்,அலுமினிய தூள்,போன்றவைகள் வெடிக்கும் போது அதில் வெளி வரும் புகை,சப்தம், தெரித்து விழும் மருந்துகள் மூலமாக சாக்கடை,நீர் தேங்கும் குழிகள்,செடி, கொடிகளில்,மரங்களில் மறைந்து வாழும் அனைத்து வகை கொசுக்களையும் அழிக்க தீபாவளி பண்டிகை ஒரு நல்ல காரணமாக உள்ளது. 


தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய பின்பு அந்தப் பகுதிகளில் "கொசுக்கள் மற்றும் பூஞ்சைகள்" அழிந்து,அதன் தாக்கம் குறைந்து இவைகளால் ஏற்படும் நோய்களின் கொடுமையும் வெகுவாக குறைந்திருப்பதை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும்


பாகம் -1-to -2  -இந்த இரண்டு பாகங்களையும் ஆழ்ந்து கவனித்துப் படித்து இதில் கூறிய முறைகளின் படி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து ஆரோக்யமாக வாழ வேண்டுமென "சித்தர் பிரபஞ்சம்" இணைய தளம் சார்பாக இறைவனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் வேண்டி வாழ்த்துகின்றோம். 

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு இந்தியா
செல் :9865430235  9095590855 – 9655688786 – 8695455549



பதிவுகளின் வகைகள்