இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday 12 February 2014

பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy

பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம்   8 - 1- 2014 – Joseph’s College Trichy











பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம்   8 - 1- 2014 – Joseph’s College Trichy

  
திருச்சி ஜோசப் கல்லூரியில் [ St.Joseph’s  College - Trichy ] 8/1/2014 ம் தேதியன்று பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் நடை பெற்றது.

நோயற்ற சமுதாயம் உருவாகவும்தாவரவியல், மூலிகைகளை பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் அறிந்து பயன்பெறும்  வகையில் பாரம்பரிய மூலிகை மற்றும் சித்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து, மூலிகைகளை நோய்களுக்கு பயன்படுத்தும் அனுபவ முறைகளை அறிந்து கொள்ளவும், தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை அறிவியலை பதிவு செய்து உலகப்பார்வைக்கு கொண்டு செல்லவும்திருச்சி ஜோசப் கல்லூரியின்"செப்பர்டு- விரிவாக்கத்துறை" சார்பாகவும்  மற்றும் "இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு ஆய்வாளர்கள் கூட்டமைப்பின்" மூலமாக பாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் மருத்துவ மலர் வெளியீடு,பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கலந்தாய்வு,மூலிகை பண்ணை அபிவிருத்தி திட்டம்மருத்துவ மூலிகைகளை கண்டறிந்து அதன் பயன்களை பதிவு செய்தல், மற்றும் அவைகளை மக்கள் பயன் பாட்டிற்காக கொண்டு செல்லும் திட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் மூலிகை ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு ஆய்வாளர்கள் கூட்டமைப்பின் நிறுவனர், பொதுச்செயலாளர் Dr.S.நாகராஜ் B.Sc., R.M.P., அவர்கள், மற்றும் திருச்சி, கரூர்,  பெரம்பலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் Dr.து.சீனிவாசன் B.I.M., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

கருத்தரங்கில் வெளியிடப்பட்ட  பாரம்பரிய சித்த மருத்துவர் களின் அனுபவ மருத்துவமுறை இரகசியங்கள் அடங்கிய மூலிகை மருத்துவ மலர் பற்றிய விரிவான விபரம் அடுத்த பதிவில்.....  

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -5 - T.N – India
cell : 9865430235 - 9095590855 







Saturday 8 February 2014

சஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham


சஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம்ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை வீடியோ பதிவு – Two Face Rudrakcham







25 - 1 - 2014 ம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம் சஞ்சீவி மலையில் ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமத்தில் இறைவன் அருளுடன், சித்தர்கள் ஆசியுடன் கட்டிட விரிவாக்க பூமி பூஜை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.அதன் வீடியோ பதிவு இது.

இந்தியாவின் தென் பகுதியான தமிழகத்தின் மலைகளில் எங்கும் காணக்கிடைக்காத அதிசய இரண்டு முக ருத்ராட்ச மரம், திரிசூல வடிவில் சஞ்சீவிமலையில் மட்டுமே உள்ளது.

இம் மகத்துவம் மிக்க திரிசூல ருத்ராட்ச விருட்சம் அகத்தியர் சித்தர் பெருமான்  தனது சீடர்களுடன் வழிபட்டதாகும். இவ் விருட்சம் நமது ஆஸ்ரமத்தின் உள் பகுதியில் அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கதாகும்.

நமது சித்தர் வேதா குருகுலத்தின் உயர்நிலை பயிற்சிகளான, வர்மக்கலை, முப்பூ, காயகற்பம், மெய்ஞான யோக சித்தி, தெய்வீக மாந்திரீகம்,போன்ற சித்தர் கலைகள் வரும் காலங்களில் நமது ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமத்தில் தீட்சை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.  

குறிப்பு : சித்தர் கலைகளில் முதல்நிலை பயிற்சிகளான சரகலை, பஞ்சபட்சி சாஸ்த்திரம்தெய்வீக மாந்திரீகம், சித்த மருத்துவம், வர்மக்கலை, இரசமணி செய்முறை பயிற்சிகள் தற்போது திருச்சியில் திருவானைக் கோவில், “ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடம் ஆஸ்ரமத்தில் பயிற்சிகள் நடைபெறு கின்றது.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி  T.N
cell : 09865430235 - 09095590855








பதிவுகளின் வகைகள்