இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday 21 April 2013

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu


ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu

கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும்  தெரிந்த பெயராக  இருந்து வந்துள்ளது.

இம் மூலிகை காடுகள்,வனங்களில்,மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50  வருடங்க ளுக்கு முன்பு  குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு , நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.

நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்.அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும்,ஓடி விடும்.

இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். 

உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது."சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது .இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும். 

 இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது.மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி,சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன்கள் :-

இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது.ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.

சிறப்பாக பாம்பு விஷங்கள்,தேள்,பூரான் விஷங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்,மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும். 

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
cell : 09865430235 - 08695455549         



Tuesday 16 April 2013

காய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1

காய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை  நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1






காய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை  நீக்கும் வழி முறைகள் 



// வணக்கம் ஐயா !

நான் திலகவதி மலேசியாவில் இருந்து தொடர்பு கொள்கிறேன்.!

“சித்தர் பிரபஞ்சம்” இணையதளம் வழியாக சித்தர்களின் தகவல்கள், சித்த மருத்துவம் பற்றி நிறைய தெரிந்து கொள்ளமுடிகின்றது.தங்களின் சேவைக்கு மிக்க நன்றி ஐயா.

ஐயா !   நாங்கள் இங்கு உண்ணும் காய்கறிகளில் உற்பத்தி செய்யும் பொழுதும் கடைகளில் விற்க படுகின்ற பொழுதும், அதிகமான ரசாயன கலவை கலக்க படுகிறது.இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. காய்கறி கழுவும் போது காய்கறிகள் சமைக்கும் போதும் கிருமி நாசினியாக மஞ்சள், உப்பு சேர்க்கிறோம். இதை தவிர்த்து இந்த ஆரோக்கிய எதிர்  விளைவை தடுப்பதற்கு சித்த மருத்துவ ஆலோசனை வழங்குமாறு ஐயாவிடம் மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.  

நன்றியுடன்,
திலகவதி அண்ணாமலை

மலேசியா //

மேற்கண்ட கேள்வியை மலேசியாவில் இருந்து "திலகவதி அண்ணாமலை" கேட்டுள்ளார். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அவசியம் அனைவருக்கும் தேவையான ஒரு கேள்வியாகும் இது .

இதற்கான பதிலை விரிவான ஆய்வு விளக்கங்களுடன்,தீர்வுக்கான வழிமுறைகளுடன் விபரமாக பதிவு செய்கின்றோம். 

காய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை  நீக்கும் வழி முறைகள் 

[ காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வோர் குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டிய பதிவு]

உடல் நலத்தில் கவனம் உள்ளவர்கள் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்வார்கள். ஆனால் அந்த காய்கறிகளே விஷமாக மாறி அவர்களின் உடலில் சென்று அடைகின்றது என்ற உண்மை தெரிந்தால் ஒரு அதிர்ச்சி உண்டாகிறதுதானே நமக்கு ?

அது உண்மையா என்று பார்த்தால் அது உண்மையாகத்தான் இருக்கிறது, காய்கறியில் எப்படி விஷம் சேருகிறது என்று பார்த்தால் அதை விளைவிக்க பயன்படுத்து உரம் மற்றும் பூச்சி கொல்லிகள் மூலம்தான் என்பது அறிய முடியும், இந்தியாவில் அதிக அளவில் மகசூலை அள்ளிக் குவிக்க அதிக அளவு உரங்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் தடை செய்யப்பட்ட உரங்களையும் இன்னும் பலர் உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டிய அரசாங்கமோ ஒழுங்கற்று இருக்கிறது.

இதனால் காய்கறிகளை சமையலில் சேர்த்து கொள்பவர்கள் பலவித உடல் நலக் குறைவிற்கு உட்படுத்தப்பட்டு ஹாஸ்பிடலுக்கு பணத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இதில் இருந்து நம்மை உடல் நலத்தை பாதுகாத்து கொள்வது எப்படி என்று பார்க்கும் போது திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா விவசாய பல்கலைகழகத்தில் உள்ளவர்கள் ஆராய்ச்சி செய்து ஒரு வழி முறையை கண்டுபிடித்துள்ளனர்.


[A study on the impact of pesticide residue on farm-produce - conducted by the pesticide research and analytical laboratory of the Kerala Agricultural University ]

இது மிகவும் எளிய முறை எல்லாலோராலும் எல்லாவிட்டிலும் மிக எளிதாக பயன் படுத்துக்கூடிய ஒரு முறைதான். இந்த முறைப்படி நமக்கு தேவை யானது கொஞ்சம் புளித் தண்ணிரும் சிறிது வினிகரும்தான். இந்த இரண்டை யும் மிக்ஸ் செய்து அதில் காய்கறிகளை சிறிது ஊறவைத்து கழுவினால் “காய்கறிகளில் படிந்திருக்கும் உரங்கள், பூச்சி கொல்லிகள் அனைத்தும் 95 % சதவிகிதம்” போய்விடும்.

"In our study, we found that tamarind water and vinegar were best suited to remove pesticides from vegetables," says Dr Thomas Biju Mathew, department of entomology, who conducted the tests along with a team of scientists. He says they used a majority of pesticides available in the market -- rated red (extreme), yellow (high) and blue (moderate) according to toxicity levels, for the tests.

"Tamarind water and vinegar were effective in removing the pesticide residue (up to 95%), especially in spinach, curry leaves, chillies, lady's finger, snake gourds and brinjals that were contaminated with heavy doses of pesticides."

காய்கறிகளை 20 mg புளியில் கரைத்த நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் போதும் பாவக்காய் பீன்ஸ் போன்ற காய்கறிகளை இரு முறை கழுவவும்.

இவர்களின் ஆராய்ச்சியில் ஃப்ரவுன் அரிசியைவிட பாசுமதி அரிசியில் உரப்படிமான மிக அதிக அளவில் இருப்பதையும் கண்டு பிடித்தனர். அதனையும் நன்கு கழுவி சமைத்தால் 85 சதவிகிதம் அதில் படிந்துள்ள உரத்தன்மை நீங்கி விடும்.

The Central Insecticides Board and Registration Committee நாடு முழுவதும் 240 pesticides களுக்கு அனுமதியையும் 70 வகையான pesticides யை தடையும் செய்துள்ளன.

இந்த கேரளா அக்ரிகல்ட்சர் யூனிவர்சிட்டியில் சமிபத்தில் நடத்திய ஆராய்ச்சி யில் அநேக காய்கறிகளில் அதுவும் குறிப்பாக மிளகாயில் (18 of 48 samples) & கறிவேப்பிலையில் (47 of 79 samples) தடை செய்யப்படுள்ள pesticides கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


காய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை  நீக்கும் வழி முறைகள் பற்றிய மேலும் அரிய விபரங்களை பாகம் - 2 ல் காணலாம். 

நன்றி !

இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
cell :09865430235 - 08695455549




Sunday 14 April 2013

இரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book

இரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy  Research  book















இரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy  Research  book

இரசவாத ஆய்வாளர், நண்பர் சு.ஷாஜகான் அவர்களின்  சித்த மருத்து வத்தின் திறவுகோல் ஆன்மீகத்தின் ஊன்றுகோல் எனும் "இரசவாதம் பொக்கிஷம் - பாகம் -3" என்ற இரசமணி, இரசவாத ஆய்வு மற்றும் செய்முறை விளக்க நூல்.

இந்த நூலில்  

1 - இரசமணி செய்யும் முறை 
2 - ஐம்பொன் செய்யும் முறை 
3 - அட்சயமணி செய்யும் முறை 
4 - இரசப் பதங்கம் செய்யும் முறை 
இவைகள் செய்முறை விளக்கப் படங்கள்,மற்றும் இரசமணியின் கடினத் தன்மையை இன்றைய அறிவியல் நோக்கில் ஆய்வுக்கூட பரிசோதனை சான்றிதழ் விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளார்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் -திருச்சி 
cell :09865430235 - 08695455549   


Friday 12 April 2013

முப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book

முப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள்
Muppu Secret  Research  Book











நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
cell :09865430235 - 08695455549



பதிவுகளின் வகைகள்