இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday 31 October 2012

போகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு

போகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண 
திருமேனி வரலாறு 




போகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண 
திருமேனி வரலாறு 

பதினெண் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படும் 
போகர் பெருமான் ககன குளிகையின் மூலம் விண்
வெளியில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்.

இவர் ஒருமுறை வெளிநாட்டிலுள்ள மூலிகைகளை 
ஆராய்ந்து அறிவதற்காக நாடு விட்டு நாடு பறந்து
சென்ற போகர் சீன தேசத்தில் இறங்கி ஆய்வுகள் 
செய்யத் தொடங்கிய போது இவ்வுலகின் சாதாரண 
மக்களைப் போல் இல்லற வாழ்வில் ஈடுபட்டு அங்கேயே 
வசிக்கத் தொடங்கி விட்டார்.

இதனால் அவரிடமிருந்த அற்புத சக்திகளும்,ஆற்றல்களும்,
ஒவ்வொன்றாய் மறைந்தது.போகருடைய சித்திகள் 
எல்லாம் சக்தி இழந்து போய்விட்டது.

போகரிடம் சீடராக இருந்தவர்களில் "புலிப்பாணி"மிகவும் 
விசுவாசத்துடன் பிரியமான சீடனாக இருந்து வந்தார்.
அதனால் அவருக்கு அனைத்து விதமான சித்துக்களையும் 
கற்றுக்கொடுத்திருந்தார் போகர் பெருமான்.

தமது குருவிற்குத் தெரிந்த அனைத்து சித்துக்களும் தமக்கு 
கைவரப்பெற்ற பிறகும் கூட புலிப்பாணி தமது குருநாதரை 
விட்டுப் பிரியாமல் இருந்தார். அப்படிப்பட்ட நிலையில்தான் 
மூலிகைகளின் ஆய்விற்கு சீனாவிற்குச் சென்ற தமது குரு 
நெடு நாட்களாகியும் திரும்பாதது கண்டு கவலை அடைந்த
புலிப்பாணி குருநாதரைத் தேடி ஆகாய மார்க்கமாய் புறப்பட்
டுச்சென்று சீனாவில் கண்டறிந்து சக்தியிழந்த நிலையில் 
இருந்த அவரை மீட்டு தமது முதுகின் மீது ஏற்றிக்கொண்டு 
ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை 
அருகிலுள்ள "கன்னி வாடி" மலையை வந்தடைகிறார்.

தனது குருவான போகர் சகல விதமான சித்திகளின் ஆற்றலை 
இழந்து சாதாரண மனிதனைப் போல் இருப்பதைக்கண்டு 
புலிப்பாணி துயரமுற்று கண்ணீர் விட போகர் அவரைத்தேற்றி 
சீடனே !எனது அருளாலும்,ஆசியாலும் உனக்கு அஷ்டமா
சித்திகளும் கைவரப்பெற்றுள்ளன.நீ அவற்றை எனக்கு 
குருவாக இருந்து போதித்து விட்டால் நான் மீண்டும் எல்லாம் 
வல்ல சித்தனாக ஆகி விடுவேன் என்று கூற புலிப்பாணி 
ஆறுதல் பெற்றாலும்,தமது குருவை சீடனாக ஏற்க மனம் 
தடுமாறுகின்றார்.

அப்போது போகர் தந்தைக்கு உபதேசித்த முருகப் பெருமானின்
கதையைச் சொல்ல புலிப்பாணி ஆறுதல் அடைகின்றார்.பிறகு 
இருவரும் ஒரு முடிவிற்கு வருகின்றனர்.அதன்படி ஒரு தண்டம் 
ஒன்றை நிறுவி அதற்கு புலிப்பாணி அனைத்து கலைகளையும் 
உபதேசிக்க அதன் அருகில் அமர்ந்து போகர் கேட்டு எல்லா வித 
சித்துக்களும் மீண்டும் கைவரப்பெறுகிறார்.

அதன் பிறகு உலக மக்கள் அனைவரும் நோய்களில் இருந்து 
சுலபமாக நிவாரணம் பெரும் விதமாக "நவபாஷாண முருகன்"
திரு உருவ சிலையை வடிக்கின்றார்.அதற்கு புலிப்பாணியின் 
மூலமாக தாம் சித்து நிலையை அடைந்ததை நினைவு கூறும் 
பொருட்டு தாம் அமைத்த நவபாஷாண விக்ரகத்திற்கு போகர் 
"தண்டாயுதபாணி"என்று பெயர் சூட்டினார்.இப் பெயரையே 
மக்களும் தங்களின் குழந்தைகளுக்கு முருகப் பெருமானின்
பெயராக சூட்டி மகிழ்கின்றனர்.

முருகப் பெருமானின் நவ பாஷாண திருமேனி ஆண்டிக் 
கோலத்தில் தண்டத்தை தாங்கிய திரு உருவமாக உள்ளது.   

தண்டம்   -கழி -கம்பு 
ஆயுதம்   -ஆயுதம் போல் உள்ளதால் 
பாணி      - புலிப்பாணி 

போகர் பெருமான் தான் வடித்த விக்ரகம் மனிதகுல சமுதாயம்
தொடர்ந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பழனி மலையில்
பிரதிஷ்ட்டை செய்தார்.இத்திரு உருவச் சிலையில் அபிஷேகம் 
செய்கின்ற விபூதி,சந்தனம்,பன்னீர்,தேன்,பஞ்சாமிர்தம்,சிலையின் 
"நவபாஷாண கட்டு மருந்தின்"சத்தைப் பெற்று பிரசாதமாக 
மாறுகின்றது.இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள நாட்
பட்ட கொடிய நோய்களையும் போக்குகின்றது.

இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை கொடிய 
பிணிகளில் இருந்து மீட்டு வந்த தண்டாயுதபாணி நவபாஷாண 
திருமேனியின் பல இடங்களில் சிதிலம் அடைந்து விட்டதால் 
இப்போது அபிஷேகங்கள் முன்பு போல் செய்வதில்லை.

இப்போது தேவஸ்தானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் 
கலப்படமில்லா (ஒரிஜினல்)பொருட்களைக் கொண்டு அபிஷேகம் 
செய்யப்படுகின்றது.இப்போது 

மூலவருக்கு :-நவ பாஷாண தண்டாயுதபாணி முருகனுக்கு

ஆறு கால பூசை -
பதினாறு வித அபிஷேகம் -
எட்டு வித வேடம் -
1-சாது, 
2-சன்னியாசி, 
3-வேடர், 
4-விருத்தர், 
5-சண்முகர்,
6-சுப்பிரமணியர், 
7-வேதியர், 
8-இராஜ அலங்காரம், 
என எட்டு வித அலங்காரம் செய்யப்படுகின்றது.

நவபாஷாண முருகனின் திருமேனியில் இராக்கால பூசையின் 
போது சந்தனக் கட்டையை அரைத்து சிரசில் வைத்து விடுவர்.

அதிகாலை "விழா பூசை"யின் போது "கவ்பீன தீர்த்தம்"மற்றும் 
சிரசில் வைத்த சந்தனமும் வழங்குவர்.இது ஒரு சிலருக்கு 
மட்டுமே கிடைக்கும்.இதனைப் பெறுபவர் வாழ்வில் அனைத்து 
துன்பங்களும் நீங்கி,சந்தோசமும்,மிகப்பெரிய பொருளாதார 
முன்னேற்றமும் பெறுகின்றனர்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org      
  
  

         



Tuesday 16 October 2012

வைத்திய முப்பூ குரு - விளக்கம் -Muppu guru -muppoo guru

 வைத்திய முப்பூ குரு விளக்கம் 

-Muppu guru -muppoo guru








           வைத்திய முப்பூ குரு 


இன்றைய மருத்துவ முறைகளில் தலைசிறந்த மருத்துவமும்,ஆதி மருத்துவமாகவும் போற்றப்படுவது சித்த மருத்துவம் தான் .இறைவன் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இம்முறையில் மருத்துவம் தவிர யோகம்,ஞானம்,இரசவாதம்,காயகற்பம்,சரகலை,பஞ்சபட்சி, மாந்த்ரீகம், போன்ற அரிய கலைகள் அடங்கியுள்ளன.

இது வேறு எந்த ஒரு மருத்துவ முறையிலும் இல்லாத சிறப்பாகும்.

இப்படி மகத்துவம் வாய்ந்த சித்த மருத்துவத்தின் மருந்துகள் செய்முறையில் மணிமகுடமாக இருப்பது முப்பூ என்னும் குருமருந்து ஆகும்.இம் முப்பூவை தயாரிப்பது மற்ற மருந்துகளைப் போல்  எளிதான காரியமல்ல.சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் முப்பூவைப் பற்றிய பாடல்களில் ஏராளமான பரிபாஷைகளில் (மறை பொருள்)கூறியுள்ளதால் சித்தர்களின் நூல்களை படித்து அறிந்து முப்பூவை தயாரித்தல் என்பது இயலாத காரியமாகும். 

சித்தர் நெறியில் தேர்ச்சி பெற்ற மெய்குருவின் திருவடியைப் பற்றி உண்மை சீடனாக -12-வருடம்  தொண்டுகள் செய்து பெற வேண்டிய அபூர்வமான கலைகளில் இதுவும் ஒன்று என சித்தர்கள் தங்கள் நூல்களில் தெளிவாகக் கூறியுள்ளனர்.

முப்பூவில் 5 - வகை

1 - வைத்திய முப்பூ 
2 - இரசவாத முப்பூ 
3 - மாந்திரீக  முப்பூ 
4 - காயகற்ப முப்பூ 
5 - ஞான முப்பூ   

என்ற ஐந்து வகைகள் உள்ளன.

வைத்திய முப்பூ பற்றிய விளக்கம்:

சித்த  மருத்துவத்தில் சூரணம்,லேகியம்,தைலம்,பற்பம்,செந்தூரம்,சுண்ணம்,பாஷாண கட்டு, களங்கு,போன்ற வகைகளாக மருந்துகள் தயார் செய்யப்படுகிறது.இம் மருந்துகளை நோய்களுக்கு உள்ளே சாப்பிடும் பொழுது இதனை இலகுவாகச் செரிக்கச் செய்து மருந்துகளின் முழுமையான சத்துக்களை உடலில் சேர்ப்பதற்கும், மருந்துகளின் அணுக் கூறுகளைப் பிரித்து    
செயல்படும் தன்மையை பலமடங்கு அதிகரித்து வீரியப்படுத்துவதற்கும் சித்தர்களின் மெய்ஞானத்தால் கண்டறிந்து அருளப்பட்டதே வைத்திய முப்பூவாகும் .

இதனை அனைத்து சித்த மருந்துகளுக்கும் குறிப்பிட்ட அளவில் கலந்து கொடுக்கும் போது சித்தர்களின் நூல்களில் கூறியுள்ளபடி பரிபூரண மருத்துவ பலனை அடைய முடியும்.

முப்பை முன்னே செய் 
மருந்தை பின்னே செய் 
                                          என்பது சித்தர் வழக்காகும்

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதைப்போல் 
முப்பில்லா மருந்தும்..................

சிறப்புடையதல்ல என உணர்ந்து கொள்ள வேண்டும்.உண்மை என்னவென்றால் நாம் நோய்களுக்கு கொடுக்கும் சித்த மருந்துகளின் சத்துக்கள் பாதி அளவு உடலில் சேர்வதே அபூர்வம் தான்.காரணம் நமது உடலில் இரைப்பையில் சுரக்கும் பித்த நீருக்கு (ஹைட்ரோ குளோரிக் ஆசிட்)இம் மருந்துகளை கரைப்பதர்க்கான ஆற்றல் குறைவு என்பதால் பித்தநீரின் ஆற்றலைப் பெருக்குவதற்கு வைத்திய முப்பூ பேருதவி புரிகின்றது.மற்றும் இம்முப்பூவின் ஆற்றலால் மருந்துகள் பல மடங்கு வீர்யத்துடன் செயல் புரிந்து நோய்களை எளிதில் போக்குகின்றது . 

வைத்திய முப்பூவில் இரண்டு வகை உள்ளன.

1 - சூரண முப்பூ                 :அனைத்து வித சூரணங்களுக்கு மட்டும் 

2 -வைத்திய முப்பூ  குரு : லேகியம்,தைலம்,பற்பம்,செந்தூரம்,போன்ற அனைத்திற்கும்.


சூரண முப்பூ விளக்கம் : 
ஆதி வஸ்து வாகிய மூலப் பிரணவப் பொருளிலிருந்து சுத்தி முறையில் நஞ்சுவை நீக்கி பின்பு அகரம் உகரம் என இரண்டாகப் பிரித்து மகரம் எனும் தசதீட்சை யாக முடிக்கப் பட்ட முப்பூ .

இது அனைத்து வித சூரணங்களுக்கும் கலந்து கொடுக்க இரண்டு மடங்கு உயிர்ப்பைத் தூண்டும் ஆற்றல் பெற்றது.


சூரண முப்பூ பயன்படுத்தும் பயன்படுத்தும் முறை : 
மூலிகைப் பொடிகள்,மூலிகை சூரணங்கள்,திரிகடுகு,திரிபலா,தாளிசாதி சூரணம்,அஷ்ட சூரணம்,அமுக்கரா சூரணம்,போன்ற அனைத்து வித சூரணங்களுக்கும் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் அதாவது சூரணங்கள் 100-கிராமுக்கு -முப்பூ - 10-கிராம் கலந்து கொடுக்க சூரணங்கள் இரண்டு மடங்கு வீர்யத்துடன் செயல்படும் . 

(இது சித்தர் வழி பாரம்பரிய முறையில் கையாண்டு வரும் இரகசிய முறையாகும்)

இம் முப்பூவை முடித்து சுமார் 10- வருடங்களுக்கு முன்  பல  சித்த  மருத்துவர்களுக்கு வழங்கி வந்தோம். அவர்களும் பயன் படுத்தி உண்மையான பலனைக் கண்டு பாராட்டியுள்ளனர்.


நன்றி ! 
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org       

  

  

                                                                                                            

Monday 8 October 2012

சித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy

rpj;jh;fspd; ,urthjk; -ghfk;-1










gpwe;J tho;e;J ,wg;gJjhd; kdpj tho;tpd; ,ay;gh?kdpj tho;tpd; KbT ,wg;Gf;Fk; mg;ghw;gl;lJ! mJ ,aw;ifapy; kiwg;ghf cs;sJ. me;j kiwg;gpid mwptJ vg;gb? mwpe;jth;fs; cs;sduh? mjd; topKiw vd;d? ,wg;ig nty;y KbAkh? vd;w gy Nfs;;tpfSf;F tpil fz;lth;fs;jhd; rpj;jh;fs;! rpj;jh;fspd; fUj;jpy; kuzk; vd;gJ kdpj tho;tpy; Vw;gLk; khngUk; tpgj;Nj nahopNa ,aw;if je;j Kbty;y! ,aw;ifia nty;y Kaw;rpf;Fk; ,d;iwa tpQ;Qhdpfspd; mpwTf;Fk; Muha;r;rpf;Fk; vl;lhj gy Ntjpapay; El;gq;fis rpj;jh;fs; fz;ldh;.


jhk; fz;l cz;ikfis- ,aw;ifNahL xd;wpa mDgtq;fis gy E}W ghly;fspy; kiwj;Js;sdh;. ,JNt rpj;jh;fspd; ,urthjk; vdg;gLk;. ,urthjk; vd;gJ ,Uk;igg; nghd;dhf;FtJ vd;gjy;y. mJ ,urthj mhpr;RtbNa jtpu mJNt KO tpsf;fKk; Nehf;fKky;y: mopAk; clk;ig mopah fhafy;gkhf;FtNj rpj;jh;fspd; ,urthj jj;JtkhFk;!.


       ,e;j ,urthjf; fiyia gyE}W Mz;Lfshf guk;giu guk;giuahfg; Nghw;wp gyE}W kiwnkhopg; ghly;fsp;y; kiwj;Js;sdh; ek;ehl;L rpj;jh;fs;. g+h;t Gz;zpaKk; rpj;jh;fspd; MrpAk; g+uzkha; fpilf;fg;  ngw;wth;fSf;Nf ,jd; cz;ik GhpAk;. mg;gbg;gl;lth;fs; jkpofnkq;Fk; Mq;fhq;Nf ,tw;;iw mwpe;Jk; mwpahjth;fs; Nghy; mlf;fkhf tho;e;J tUfpd;wdh;. gy;fiyf;fofg; gbg;Ngh>Nrhjidr;rhiy Ma;TfNsh epfo;j;jhky; gy ,urthjf; fUj;Jf;fisr; ruskhf tpsf;Fk; jpwd; cilath;fs;. rpj;jd; Nghf;F rptd; Nghf;F vd;W tho;gth;fs;!


     ,urthjk; kw;Wk; fhafy;g Muha;r;rpapid gy E}w;whz;Lfshf vfpg;J rPdh n[h;kd;; yz;ld;; u\Pah Nghd;w gy;NtW ehLfspy; ele;J te;Js;sJ. ,jpy; ghuhnry;r];; Ngrpy;thyd;ild n`h;k];; Nfh`q; Nghd;w Qhdpfs; ,urthj;jpy; ntw;wpaile;Js;sdh;. ,th;fSk; ,jd; ,ufrpaq;fis jkJ E}y;fspy; ghpghi\fspy; vOjpAs;sdh;. Nkiyehl;L ,urthjpfSk; gQ;rg+j rf;jpapid mwpe;Js;sdh;. Mdhy; mth;fs; gQ;rg+jj;jpy; ehd;F rf;jpfis kw;Wk; Vw;Wf; nfhz;Ls;sdh;. mjhtJ epyk;; ePh;; neUg;G; fhw;W Mfpaitfis kl;LNk. ,e;j ehd;F rf;jpfisf; (Four Elements) nfhz;L ,urthj;jpy; ntw;wpailaKbAk; vd;gJ ,th;fs; $w;W.




              nte;joypy; ,ujk;;;itj;J Ie;J Nyhfj;ijAk;
              Ntjpj;J tpw;Wz;zyhk;
          NtnwhUth; fhzhky; cyfj;J cyhtyhk;
              tpz;ztiu Vty; nfhs;syhk;
          re;jjKk; ,sikNahbUf;fyhk; kw;nwhU
              rhPuj;jpDk; GFjyhk;
          ryNky; elf;fyhk; fdy;Nky; ,Uf;fyhk;
              jd;dpfhpy;yh rpj;jp ngwyhk;

vDk; jhAkhdth; ghlypy; ,urthj rpj;jp gw;wp Nkw;fz;lthW Ngrg;gLfpwJ.



     ,Ue;Jghh; #jj;ij vt;tz;zj;jhYk;
,Uf;fpdtd; Njtdlh Mdhy;- ,Lf;fkpy;iy .
                                            vd;gJ a+fp Kdpapd; ghl;L


       tlnkhop ,uhk fhtpaj;jpYk; =uhkh; gjpdhd;F Mz;L tdthrk; nrd;wNghJ mth; jz;lfhUz;aj;jpy; rpj;jh;fsplkpUe;J ngsjpf tpj;ijiaAk; thjKiwfisAk; fw;Wf; nfhz;ljhf nra;jp fpilf;fpwJ.



     Mf ,urthjk; vd;why; ekf;F rpj;jh;fNs Kd;dpw;fpwhh;fs;. rpj;jh;fs; vd;why; rpj;jj;jpy; rpe;jpj;jgbNa clYk; cz;gdTk; mile;J mDgtpg;gth;fs;. mdpkh Kjy; trpj;Jtk; m\;lkh rpj;jpfis iftug; ngw;wth;fs; jd;idj;jhd; ahh; - vq;fpUe;J te;Njhk; - ekf;Fs;Ns vd;d ,Uf;fpwJ vd;gij jd; Mj;k Qhdj;jhy; cs;Nehf;fp ghh;j;jth;fs;. ,th;fs; fhuz fhhpa tiffshy; clk;ig Nrhjpj;J vt;ntt;tifg; nghUs;fshy; clk;G MdJ vd;W Kjypy; njhpayhdhh;fs;.


,e;j clk;Gf;F kuzk; cz;L vd;gJk;; gpwg;Gk; ,wg;Gk;; cyfk; KOtJk; vf;fhyj;jpYk; xNu khjphpahf ,Uf;fpwijAk; itj;jpaf; nfhs;ifAk; xNu khjphpahf rpU\;b fhyj; njhlf;fj;jpypUe;J ,d;wsTk; ele;J xNu Njfj;jpy; ,Ue;J nfhz;L kuzkpyh ngUtho;itf; fz;Lgpbj;J gpzp %g;G rhf;fhL ,itfis nty;y thjk; itj;jpak;; Nahfk; Qhdk; ,itfis ngwNtz;b fz;Lgpbf;fg;gl;lNj ,urthjk;.


     clk;G mopahky; ,Ue;jhy;jhd; ,e;j clk;gpy; ,Ue;J nfhz;L Md;khit epiyg;gLj;jp gpwthj ngUepiyf;F tuKbAk;. MfNt clk;gpd; Neha; jPh;f;fTk; %g;gpYk; ,sikAld; ,Uf;fTk; itj;jpaKk;; fhafy;gKk;; ,urthjKk; fhzNtz;ba epiy te;jJ:

           clk;ghh; mopapy; capuhh; mopth;
          jplk;gl nka;Qhdk; NruTk; khl;lhh;
          clk;ig tsh;f;Fk; cghak; mwpe;Nj
          clk;ig tsh;j;Njd; caph; tsh;j;NjNd
vd;gJ Kjd;ikr; rpj;jh; jpU%yh; thf;F.


       thjp m/jhtJ Alchemistd; ,yl;rpak; vd;dntdpy; - Kf;fpakha; nja;t gf;jp cs;stdha; ,Uf;f Ntz;Lk;. ituhf;fpak;; jahs Fzk;; jUkk; Nkyhd kdRj;jk; - Mfpa ,f;Fzq;fs; mtrpak;. ,th;fSf;F nghUshir mjhtJ nghd;dhir kw;Wk; ngz;zhir $lhJ. ,th;fNs ,urthjpfs;; MfKbAk;.


     vg;gb xU Foe;ij fh;g;gj;jpy; cUthFk; NghNj gQ;rg+jq;fspd; tpfpjhrhu cwT gpujhdNkh mt;tz;zNk thjk; rpj;jpg;gjw;F Nkw;nrhd;d Ik;g+jq;fsd; cwT fpukg;gb mika Ntz;Lk;. ,t;tpfpjhr;rhuj;jpy; rpWkhWjy; Neh;e;jhYk; fUtpypUf;Fk; rpR vg;gb rpije;J NghFNkh mJNghy ,urhad khWjy;fspd; ,Wjp KbT Njhy;tpahf ,Uf;Fk;.
                                ghfk; -2 y; -njhlUk;


ed;wp !
,kafphp rpj;jh;;;
www.siddharprapanjam.org



Tuesday 2 October 2012

சஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2

சஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம்                      பாம்பு விஷகடி - முறிவு  -பாகம் -2






சஞ்சீவி மூலிகையின் தேடுதலின் போது அதன் இன்னொரு பரிணாமத்தை எனக்கு ஒரு மகான் உபதேசித்தார். நமது புராண காவியங்களில் ஒன்றான ராமாயணத்தில் ஸ்ரீராம பிரான் சீதா தேவியை ராவணனிடமிருந்து மீட்கும் போது நடந்த போரில் ராவணனின் மகன் இந்திரஜித் நாகாஸ்திரம் ஏவியதில் ஸ்ரீராமர், லட்சுமணன் ஆகியோர் மூர்ச்சையாகி விட இதனால் மனம் கலங்கிய ஹனுமனிடம், ஜாம்பவான் சஞ்சீவி மலையினை பெயர்த்து வரச் செய்து இம் மூலிகையினைக் கொண்டு இருவரையும் உயிர் பெறச் செய்தார் என்று ராமாயணம் சஞ்சீவி மூலிகையின் மகிமையை பறை சாற்றுகிறது.

மேற்கண்ட ‘நாகாஸ்திரம்’ என்பது நாகப் பாம்பின் விஷத்தினால் தயார் செய்யப்பட்ட ஒரு ஆயுதம். இதன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகையே ‘சஞ்சீவி’ என்பதாகும். இறைவனின் படைப்பில் எங்கெல்லாம் நஞ்சு உள்ளதோ, அதன் அருகிலேயே அமிர்தமும் படைக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயமான உண்மை. தேவர்கள் சாகாவரம் தரும் அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடைந்த போது முதலில் விஷம் தான் வெளி வந்தது.

 இதனை ஈசன் உண்டு திருநீலகண்டன் ஆனார். அதன் பிறகு தான் அமிர்தம் கிடைத்தது.

இந்த அடிப்படைத் தத்துவத்தின் படி பார்த்தால் எங்கெல்லாம் பாம்புகள், சர்ப்ப இனங்கள் உள்ளனவோ அதன் அருகிலேலே சஞ்சீவி மூலிகையை இறைவன் படைத்துள்ளார் என்பது தெரிய வரும். இம் மூலிகை சுலபமாக எங்கும் கிடைக்கக் கூடியது: அனைத்து காலநிலை மாறுபாடுகளுக்கும் உட்படாமல், அழியாமல் நிலைத்து நிற்பது. இதன் மகிமையை உணராமல் வேறு எங்கெங்கோ தேடி அலைகின்றனர். இந்த சஞ்சீவி மூலிகையின் உதவியால் பாம்பின் விஷத்தை ஐந்து நிமிடத்தில் முறிக்கலாம். இந்த அரிய மூலிகையை அறியாதவர் யாருமில்லை. இதுவரை குரு. சீட முறையில் போதிக்கப்பட்டு வந்த சஞ்சீவி மூலிகையின் கைபாகம், செய் பாகத்தினை உலக மக்களின் நலன் கருதி பதினெண் சித்தர்களின் திருவடியைப் போற்றி வெளியிடுகின்றேன்.

“பானு சதா புஷ்பம்” செடியே சஞ்சீவி மூலிகை என்பதாகும். இது இல்லாத இடமே இல்லை. எளிதில் கிடைக்கும் படியும் இறைவன் படைத்துள்ளார். இது வெயில் காலம், மழைக் காலம் போன்ற எல்லாவகையான பருவக்காலங்களி லும் கிடைக்கக் கூடியது.

 எவர் ஒருவர் பாம்பு கடித்து விஷத்தால் பாதிக்கப்பட்டு நம்மிடம் வந்தாலும், உடனே “பானு சதா புஷ்பம்” செடியின் மலராத மொட்டு மூன்றைப் பறித்து, அதன் கணுவை நீக்கி பின்னர் மூன்று வெற்றிலையை எடுத்து, ஒவ்வொன்றி லும் ஒரு மொட்டுவையும், 5-மிளகையும் வைத்து சுருட்டி, ஒவ்வொரு வெற்றிலை யாக கடிபட்டவரின் வாயிலிட்டு மென்று சுவைக்கச் செய்து சிறிது சிறிதாக உமிழ்நீரை விழுங்கச் செய்ய வேண்டும். 

 இப்படி மூன்று வெற்றிலையையும் தின்ன 5 நிமிடத்தில் விஷம் முறிந்து விடும். பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வைத்து கரைத்த பழைய கஞ்சி கொடுக்கவும்.

இம் மூலிகையின் மகத்துவங்களையும், அனுபவ சூட்சும இரகசியங்களையும்,  எங்களின் ஆய்வாளர்கள் கூட்டமைப்பின் கருத்தரங்கில் முன்பு வெளியிட்டோம்.இதன்படி கையாண்டு பல மருத்துவர்கள் பாம்புக் கடியின் விசத்தை முறித்து பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

நன்றி !

இமயகிரி சித்தர் ...
siddharprapanjam@gmail.com
www.siddharprapanjam.org
சித்தர் பிரபஞ்சம் குழு -face book


Monday 1 October 2012

சஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் (பாம்பு விஷகடி - முறிவு) பாகம் -1

சஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம்                      பாம்பு விஷகடி - முறிவு  -பாகம் -1





நமது தமிழகத்தின் கிராமப்புறங்களில் ‘சஞ்சீவி’ மூலிகையைப் பற்றி, செவிவழிச் செய்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்போம். அந்த மூலிகை பல அதிசய சக்திகள் கொண்டது என்றும் கூறப்பட்டிருக்கும். ஆனால், எத்தனைப் பேருக்கு அது பற்றி விவரம் தெரியும்?

அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும். தாய் கழுகு இதை தேடி செல்லும் வரை நாம் காத்திருந்து, அதன் பின்னர் நாம் கூட்டில் இருக்கும் குஞ்சுக் கழுகின் கால்களில் சிறிய இரும்புச் சங்கிலியைக் கட்டிப் போட்டு விட்டு, மறைந்து கொள்ள வேண்டும். இரையுடன் திரும்பிய தாய்க் கழுகு, தனது குஞ்சுகள் சங்கிலியால் கட்டப்பட்டதை உணர்ந்து, அதிலிருந்து விடுவிப்பதற்காக, சஞ்சீவி மூலிகையை தேடிச் செல்லும். சிறிது நேரத்திலேயே அதைக் கொண்டு வந்து தனது குஞ்சுகள் கட்டப்பட்ட இரும்புச் சங்கிலி மீது வைக்க அவை இரண்டாக தெறித்து விடுபடும். அதன் பிறகு, மீண்டும் அது இரை தேடி புறப்படும் வரை நாம் காத்திருந்து, பின்னர் மேலே ஏறி கூட்டில் பார்த்தால், பச்சை நிறத்தில் ஒரு மூலிகை வேர் இருக்கும். அதை எடுத்து வந்து நெருப்பில் போட்டால் வேகாது எனவும், ஓடும் நீரில் போட்டால் எதிர்த்துச் செல்லும் எனவும், இதை பூட்டிய பூட்டின் மேல் வைக்க அது திறந்து விடும் எனவும் கூறக் கேட்டிருப்போம்.

இம் மகத்துவம் வாய்ந்த சஞ்சீவி மூலிகையின் வேரை நமது காலின் தொடைப் பகுதியில் வைத்து தைத்து விட்டால், நம் உடலுக்கு ஒரு அபூர்வ சக்தி வந்து விடும். பிறகு உடலின் எந்தப் பகுதியிலும் கத்தியால் குத்தினாலும், வெட்டினாலும், அந்தச் சதைப் பகுதி கூடி விடும்: காயமும் உடனே ஆறி விடும் எனவும் பெரியோர்கள் சொல்லியிருப்பர்.

ஆனால், இன்றைய நவீன விஞ்ஞான உலகில் மேற்கண்ட விவரங்களை எல்லாம் நமப முடியுமா? இதெல்லாம் சாத்தியமா? என்றெல்லாம் நமக்குள் கேள்வி எழலாம். முதலில் இதன் அடிப்படையைப் பற்றி சற்று ஆராய்வோம்.

“இல்லாமல் புகையாது: அள்ளாமல் குறையாது” என்று ஒரு பழமொழி உண்டு. எந்த ஒரு விஷயமும், கருத்தும் உண்மையிலிருந்து தோன்றியவையாகத் தான் இருக்கும். அவை காலப் போக்கில் பல கற்பனைகள் கலந்து பல்வேறு உருவம் பெற்றிருக்கும்.

இக்கருத்தின் படி பார்த்தால் சஞ்சீவி மூலிகை இருப்பது உண்மையா? என்றால் உண்மை தான் என்று சொல்ல சில சான்றுகள் உரைக்கின்றேன்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, எனது நண்பர்களில் ஒருவராகிய மதுரை வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் அவர்கள் (இவர் தான் ஷங்கர் டைரக்ஷனில் கமலஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படத்திற்காக வர்மக்கலை பயிற்சி அளித்தவர்) ஓலைச் சுவடி ஒன்றில் சஞ்சீவி மூலிகையை பல்வேறு முறைகளில் எடுப்பது பற்றிய விவரம் இருப்பதைக் கண்டறிந்தார். அதன்பிறகு சித்தர்கள் சங்கம் அமைத்து வாழ்ந்து வந்த ‘சதுரகிரி’ மலையில் பல வருடம் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டடு, ஒரு மூலிகையானது, சஞ்சீவியின் செயலில் பாதி உள்ளதாக கண்டறிந்தார். அதை வைத்து பத்திரிகை நிருபர்களுக்கு முன் பூட்டிய புட்டை திறந்து காண்பித்தார். அவர்களும் திரும்ப சோதித்து பார்த்து ஆச்சரியத்துடன் ஒப்புக் கொண்டனர். “ஜோதிப்புல்” என்ற மூலிகை தான் அது. இது பற்றிய செய்தி -20 -வருடங்களுக்கு முன்பு “பாக்யா” வார இதழில் வெளி வந்துள்ளது.

இது பற்றிய விளக்கம் ஒரு தனிப்பதிவாக இதே தளத்தில் 
"அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம்" என்ற தலைப்பில் 
முன்பே வெளியிட்டுள்ளோம் .

எனது ஆய்வில், பல்வேறு சித்தர் நூல்களை ஆராய்ந்ததில் சஞ்சீவி மூலிகையின் அடையாளம், அதை எப்படி சோதித்து அறிவது போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சேலம் மாவட்டம் மோகனூர் வைத்தியர் பெருமாள் சேர்வை என்பவரிடமிருந்த “கொல்லிமலைக் கலிங்கம்” என்ற ஓலைச் சுவடியில் சஞ்சீவி மூலிகையைப் பற்றிய அபூர்வ தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:

“சதுரகிரி” பர்வதத்திற்கு மேல் மூலையாக குதிரை மலை உண்டு. அதன் மத்தியில் பெருமாள் கோயில் உண்டு. அந்தக் கோவிலின் தென்மேற்கு மூலையாக சின்ன சிகரம் உண்டு. அதற்கு தென் மேற்காக சுனை உண்டு. இதற்கு தெற்காக “சஞ்சீவி” உண்டு.

கருப்பு நிறமாய் இருக்கும். இலை வேப்பிலை போல் இருக்கும். அந்த மரத்தை வெட்டினால் உடனே வளரும். மரப் பட்டையை பொடி செய்து மரணமடைந்தவருக்கு வாசங் காட்ட எழுந்திருப்பான். இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தாலும் பொடியை வாசங் காட்ட எழுந்திருப்பான். இந்த வித்தை கை கண்டது. ஒரு நாளைக்கு ஐந்து வர்ணமாவான் எனச் சுவடியில் உள்ளது. (சித்தர்களின் அருள் பெற்றோருக்கு இம் மூலிகை கிட்டும்)

பாம்பு விஷ கடி சஞ்சீவி மூலிகையின் இரகசிய விளக்கம் பாகம் -2-ல் 

நன்றி !

இமயகிரி சித்தர் ...
siddharprapanjam@gmail.com
www.siddharprapanjam.org
சித்தர் பிரபஞ்சம் குழு -face book

பதிவுகளின் வகைகள்