இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday 24 May 2013

வாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer

வாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம்




















வாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் 

ஆதியில் தோன்றிய மருத்துவமாம் சித்த மருத்துவ முறையில் வேறு எந்த ஒரு மருத்துவ முறைகளிலும் இல்லாத அபூர்வமான செய்முறைகள் ஏராளமான வகைகள் இதில் மட்டுமே உண்டு.

அவைகளில் ஒன்றுதான் "வாலை ரசம்" பிரித்தல், மற்றும் "தீநீர் தயாரித்தல்" என்ற செய்முறைகள் ஆகும்.இது போன்ற முறைகளை இன்றும் தமிழகத்தில் சித்த மருத்துவர்களும், இரசவாத ஆய்வாளர்கள் போன்றோர் கையாண்டு வருகின்றனர்.

வாலை ரசம் பிரித்தல் :
சித்த மருந்துகள் செய்முறையில் தேவைப்படும் மூலப்பொருள்களில் முதன்மைப் பொருளாகக் கருதப்படுவது "பாதரசம்" ஆகும். இதனை நவ பாஷாணங்களில் ஒன்றான ஜாதி லிங்கத்திலிருந்து பாதரசத்தைப் பிரித்து எடுத்து சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஜாதிலிங்கத்தில் உள்ள பாதரசத்தை பிரித்து எடுக்க "பதங்க பாத்திரம்" என்னும் முறையில் எடுக்கலாம்.நமக்குத் தேவையான அளவில் சற்று சிறியது,பெரியது என்ற அளவில் இரண்டு மண்பானைகள் வாங்கி வந்து இதன் வாய் சரியாக பொருந்த வேண்டும்.இதில் சிறிய பானையில்  ஜாதி லிங்கத்தை பொடித்துப் போட்டு இதன் எடைக்கு நான்கு பங்கு சித்திரமூலவேர்ப் பட்டையை இடித்துப் போட்டு கலந்து மேலே பெரிய பானையை கவிழ்த்து மூடி காற்று புகாமல் சீலை மண் செய்து அடுப்பிலேற்றி இரண்டு ஜாமம் நிதானமாக எரித்து எடுக்க மேல் பானையில் பதங்கம் படிந்துள்ளதை சுரண்டி எடுத்துப் பிழிய பாதரசம் கிடைக்கும்.இதுவே வாலைரசம்  எனப்படும்.

இந்த வாலை ரசத்தினால் மருந்துகள் செய்து கொடுக்கும் போது எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை  நன்கு குணப்படுத்து கின்றது.

வாலை ரசத்தினால் தயாரிக்கப்படும் ரசமணி தெய்வீக குணங்களுடன் நன்றாக வேலை செய்யும்.

தீநீர் தயாரித்தல் விளக்கம் :
பாஷாணங்கள் 64 -வகைகள் உண்டு.உலோகங்கள் 9 -வகைகள் உண்டு. 
 தீராத நாட்பட்ட கொடிய நோய்களைத் தீர்க்க சித்த மருந்துகள் செய்யும் போது மேற்கண்ட பாஷாண,உலோகங்களை அணுப்பிராமணமாக மாற்ற உதவுவது தீநீர் ஆகும். 

தீநீர்  :   நெருப்பு தன்மையை தன்னுள் கொண்ட நீர் [ திராவகம் - Acid ] 

படிகாரம், வெடியுப்பு, பூநீர் போன்றவைகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஆவியாக வடித்து எடுப்பது தீநீர் ஆகும்.

இதற்கான செய்முறை விளக்கப் படங்கள் மேலே உள்ளது.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
cell : 9865430235 - 8695455549  
       



1 comment:

Unknown said...

Ayya pioneer yendral yenna konjam vilakkungal...

பதிவுகளின் வகைகள்