இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday 25 May 2013

ஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா

ஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா 










ஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா 

ஸ்ரீ அகஸ்திய மாமுனிவரின் மரபில்  9 -வது முனிவராகத் தோன்றிய
ஸ்ரீ சற்குருநாத மாமுனிவரின் 98-ம் ஆண்டு குருபூஜை பெருவிழா திருச்சி திருவானைக்கோவில் தென்புறம் சிவராம் நகரில் அமைந்துள்ள 
ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடத்தில் விஜய ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் - 30-5-2013 வியாழக்கிழமை நடைபெறுகின்றது.

ஸ்ரீ சற்குருநாத மாமுனிவர் 1910-ம்  வருடத்தில்  இங்கு  திருமடத்தில்  கருங்கல்லினால் 16 -அடி ஆழத்தில் கிணறு போன்ற வடிவில் அமைத்து அதனுள் 48 -நாள் பூமி தவம் இருந்து அருள் புரியும் தலம்.ஒவ்வொரு வருடமும் குருபூஜையின் போது மட்டும் இதன் தரிசனம் கிட்டும்.

ஸ்ரீ சற்குருநாத மாமுனிவர் தமிழகத்தில் இது போன்ற வெவ்வேறு இடங்களில் ஆறு ஆசிரமங்கள்  அமைத்துள்ளார்.

1 - நீலகிரி 
2 -திருச்சியில் 2 - இடங்கள் 
3 - துறையூர் 
4 - பழனி 
5 -தேனி 

அருள்நெறி சார்ந்த அன்பர்களும்,ஆன்மீக அன்பர்களும் பொதுமக்க ளும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் திருவருட் பேறினைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.


ஈசா யோகா மையம் சத்குரு ஜாக்கி வாசுதேவ் அவர்கள் கடவுள் எங்கே இருக்கின்றார் ? என்ற நூலில் தனது முற்பிறவியாக குறிப்பிடும் சற்குரு பரப்பிரம்மா ஸ்ரீ சற்குருநாத மாமுனிவர் அவர்களைத்தான்.

நமது சித்தர் வேதா குருகுலம் மூலமாக அபூர்வ சித்தர் கலைகளின் நேரடிப் பயிற்சி  நடை பெறுவதும் இங்குதான்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா  குருகுலம் - திருச்சி -T.N  
cell : 9865430235 - 8695455549
    



No comments:

பதிவுகளின் வகைகள்