இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday 13 June 2013

சுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave

சுருளிமலை அதிசயம் பாகம் – 2 -இறைவன் நுழைந்த  அதிசயக்  குகை  – God cave




சுருளிமலை அதிசயம் பாகம் – 2 -இறைவன் நுழைந்த  அதிசயக்  குகை  – God cave

சுருளிமலை தேவலோக கிரி கைலாசப் புடவு - இமயகிரி சித்தர்   வனம் 

எம்பெருமான் ஈசனின் இறை அருள் நிறைந்த கைலாயத்தில்  [இமயமலை  கைலாயம்இமயகிரி சித்தர் என்றொருவர்  இருந்தார். அவர்  சிவபெரு மானைத் தினமும்  நேரில் பூசிக்கப்  பெற்றவர்.  அவர் மீது  சிவபெரு மானுக்கு மிகவும் பிரியமுண்டு.

அப்படியிருக்கின்ற காலத்தில் துர்வாச மகரிஷி, கண்ணுவ  மகரிஷி  முதலான ரிஷிகள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள், எக்கியங்கள் வளர்த்து  இறைவனை  நோக்கித்  தவம்  செய்தார்கள்.

அத் தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த முனிவர்,  ரிஷிகளுக்கு தேவலோக வாழ்வைக் கொடுத்து தாமும்  "மகா லிங்க" சொரூபமாய்  அங்கேயே அமர்ந்திருந்தார்.அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற  சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்கமாகும்.

பின்பு தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷிமுனிவர்கள்  மன  மகிழ்வோடு  "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து போகும் போது சுருளி  மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும்முனிவர்களும்,சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும்அந்த வனத்தின் அழகும்,தேவலோக கானல்களையும்வனப்பூஞ் சோலைகளும்சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதும், அந்த உதக நீரில்   இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதும்போன்ற ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது  முக்கியம் எனத் தெரிந்து  அங்கு  இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் செல்கின்றனர்.

கைலாயத்தில் உள்ளே துர்வாச மகரிஷி,கண்ணுவ மகரிஷி முதலான ரிஷி கள் செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் வருகின்றார்ரிஷிகளை  வணங்கி சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று கேட்க அதற்கு  ரிஷிகள் கூறியது நாங்கள் சதுரகிரி தபோவனம் என்னும் மாவூற்றில் அருந் தவம் செய்து இறைவன் சிவபெருமானால் கைலாய வாழ்வைப் பெற்று  இங்கு வருகை யில் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில  காலம் தவம் செய்துஇப்போது தான் இங்கு வருகின்றோம் என்றனர்.

இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு  சுருளிமலைக்கு வந்து அங்கு தவம் செய்யும் ரிஷி,முனிவர்,சித்தர் களைப்  பார்த்து தவம் செய்ய விரும்பி அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரைஅழைத்து மலையில் இருக்கின்ற பூஞ்சோலைகளை கண்டு  மகிழ்ந்து குகை வாசம் செய்வதற்கு புடவு செய்ய  இடம் பார்த்து  ஆற்றோரம்  இருக்கின்ற குண்டு மலையில் தலை மட்டும் நுழையும்  படியாகவும்   உள்ளே விசாலமாகவும்  புடவு செய்து  [குகைகுகைக்கு  முன் பூத நாராயண  சித்தரை காவலிருக்க  வைத்துச் சொன்னதாவது ,

இந்த குகைக்குள் வரவேண்டுமென்ற விருப்பம் உள்ளவர்கள்  தவ சிரேஷ் டர்களாக இருந்தால் மட்டும் உள்ளே நுழைய இடம் கொடுக்கும்.உள்ளே வரலாம்,இவை அல்லாதவர்கள் குகைக்குள்ளே தலையை விட்டால் தலை நுழையாது என்று சொல்லி  குகைக்குள் நுழைந்து தவம் செய்து கொண்டிருக்கும்  காலத்தில்,

கைலாயத்தில் சிவபெருமானார் நம்மை தினந்தோறும் பூசிக்கின்ற  இமயகிரி சித்தரை காணோம் என்று ஞான திருஷ்டியால் பார்க்க அவர்  சுருளி மலையில் தவம் செய்வதை அறிகின்றார். சித்தருக்கு வரம் கொடுக்க  விரும்பி அம்மை உமையவளுடன் இறைவனும் சுருளி மலைக்கு எழுந்தருள்கின்றார்.

சுருளிமலையில் தவம் செய்கின்ற ரிஷிகள்முனிவர்சித்தர்கள்இறைவனை கண்டு தரிசனம் செய்கின்றனர்.அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து ,அருந்தவ ரிஷி,முனி,சித்தர்களே  உங்கள் தவம் முடிந்தவுடன்  கைலாய  வாழ்வு கொடுப்போம் என்று சொல்லி விட்டு மாயா சொரூபமாய் இமயகிரி சித்தர் இருக்கின்ற குகைக்குள் நுழைந்தார்.

அந்த புடவுக்குள்ளே வந்த சிவபெருமானைக் கண்டு இமயகிரி சித்தர்  மெய் பதறி அடி வணங்கி தெண்டனிட அவரை அழைத்துக் கொண்டு இறைவன்  வெளிவருகின்றார்.

வெளியே வந்த இறைவன் சித்தரிடம் என்ன வரம் வேண்டும்  என்று கேட்க  அவர் சுவாமி அடியேன் இந்த சுருளிமலையில் புடவில் சில காலம் வசிக்க  விரும்புகின்றேன்.ஆகையால் தங்களை யான் கைலா யத்தில் தினமும் பூசித்த  வழக்கப் படி இங்கேயும் பூசிக்கும் வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு சிவபெருமானும்,அம்மையும் அப்படியே கொடுத்தோம் என வாக்கருளிசுவாமி லிங்க சொரூபமாயும்,  தாய் அம்மை சொரூபமாயும்  அமர்ந்தனர்.
                                                             

அப்போது அங்கிருந்த ரிஷி,முனி,சித்தர்கள் அனைவரும்  பார்த்து  இறைவன் சிவபெருமானே இந்தப் புடவுக்குள் [குகைக்குள்] நுழைந்த மையால்  இந்தப் புடவுக்கு "கைலாசப் புடவு" என்ற பெயருடன் விளங் கட்டும் என்று பெயரிட்டனர். அன்று முதல் இந்தப் புடவு என்ற "கைலாச புடவு"கைலாசநாதர்  குகை" என்ற பெயருடன் இன்று வரை விளங்கு கின்றது
                                                              [ கோரக்கர் மலை வாகடம் ]  


இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பு மிக்க இறைவன்  நுழைந்த அதிசயக்குகை இது ஒன்றுதான்நாம் சென்ற பதிவில் குறிப்பிட்ட சித்தர்கள் வாழும் மர்மக்குகை என்ற தலைப்பில் குறிப்பிட்ட  குகையும்   இதுவும் ஒன்றே.மேலும் சுருளிமலையின் நாம் கண்ட நேரடி அதிசய ஆய்வு விபரங்கள் தொட ரும்… 
                                               
                                                நன்றி !  சித்தர் பொக்கிஷம் குழு – blog



எமது இணைப்பு தளமான சித்தர் பொக்கிஷம் இணையதளத்தில்  பதிவு செய்த சுருளிமலையின் அதிசயம் பாகம் - இதனை பார்வையிடாத நமது சித்தர் பிரபஞ்சம் வாசகர்களுக்காக...  



நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549  


   


2 comments:

Sermaraj S said...

மேலும் எதிர்பார்த்து மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா...

சேர்மராஜ், சென்னை.

S.Chandrasekar said...

சுருளி அருவியிலிருந்து வரும் நீரின் ஓடையில் நாம் ஏதாவது பொருளை (pen, metal scale, cellphone etc) வைத்துவிட்டு ஒரு மண்டலம் கழித்து வந்து எடுத்துப் பார்த்தல் அது அதே வடிவத்தில் கல்லாக மாறிவிடுகிறதாம். நிஜமா? மாறிவிடுவதற்கு என்ன காரணம்..?

பதிவுகளின் வகைகள்