இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday 2 July 2013

காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking

காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking 






காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking 

[ சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் - பாகம் - 3 ] 


தற்போது மேலை நாடுகளில் பசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல் பச்சை பால் உண்ணும் முறை என்பது வேகமாக பரவி வருகின்றது.இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். 

பொதுவாக இன்று நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு இரசாயண முறையில் பதப்படுத்தப்பட்டு நமது தேவைக்கு விற்கப் படுகின்றது. இதில் சில  தீமைகளும் சேர்ந்தே உள்ளது.அதாவது  Pasteurization என்னும் சுத்தி கரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில் பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அளிக்கும் முறையாகும்.இம்  முறையால் பாலில் உள்ள Vitamin C - 20% சதவீதம், Vitamin B1 10% சதவீதம் அழிந்து விடுகின்றது. மேலும் பாலில் உடலுக்குத் தேவை யான  நன்மை செய்யும் பாக்டீரியாவும் அழிந்து விடுகின்றது. இதனை உணர்ந்த மேலை நாட்டினர் Pasteurization முறையில் சுத்தி செய்யாத பாலை உண்ண விரும்புகின்றனர்.

ஆனால் இது சுகாதாரத்திற்கு கேடு என அமெரிக்க உணவு மற்றும் நிர்வாகம் FDA  -23 மாநிலங்களில் தடை விதித்துள்ளது.பச்சை பால்  விரும்பிகள்  சங்கம் இதனை எதிர்க்கின்றது.


பச்சை பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் பற்றி சித்தர்கள்  பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளனர்.

அப்பான் முகூர்த்தத்து ளைங்கடிக்குள் ளுண்பது 
மிப்பான மனுதர் விழிதாகு மூப்பாயி 
கஞ்சத்தான் காண்டற் கரியனகிலமுன் 
தஞ்சத்தானுண்ட விருந்தாம்.

பசும்பால் கறந்த ஐந்து நாழிகைக்குள் [2- மணி நேரம்]உண்பது நன்று. அவ்வாறு உண்டால் அப் பால் தேவாமிர்தத்துக்கு ஒப்பாகும். ஐந்து  நாழிகைக்கு மேல் உண்டால் கைலாசபதி உண்ட ஆலகால விஷத்திற்கு ஒப்பாகும்.


காலையில் காய்ச்சாத பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் 

சூரிய உதய காலத்தில் பச்சை புல் மேய்ந்த ஆரோக்யமான பசுவின் பசும்பால் உண்பதால் கை கால் எரிச்சல், திரேக எரிச்சல், மஞ்சள் காமாலை,பாண்டு,இரத்த பித்தம், மார்பு சளி, போன்ற நோய்கள் தீரும்.தேகம் ஒளிவிடும், தாது புஷ்டி உண்டாகும்,மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கரந்து சுத்தமான துணியில் 3 முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.

சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்.  



நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
mail :siddharprapanjam@gmail.com
cell : 9865430235 - 8695455549      




  








1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி...

பதிவுகளின் வகைகள்