இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday 5 January 2014

இந்திரகோபம் வசியம், அதிசய ஜாலம் - Inthirakobam Vasiyam

இந்திரகோபம் வசியம், அதிசய ஜாலம் - Inthirakobam Vasiyam 


நாம் வாழும் பூமியில், இயற்கையில்  ஏராளமான அதிசயங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக மூலிகைகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகளிடம் ஏராளமான மர்மமான இரகசியங்கள் அடங்கி யுள்ளன. இவைகளை சித்தர்கள் தங்களின் ஞானத்தால் கண்டறிந்து அனுபவத்தில் கையாண்டு செயற்கரிய செயல்களை சாதித்துள்ளனர்.

அவ்வகை இனங்களில் ஒன்றுதான் இந்திரகோபம் என்னும் அதிசய பூச்சி வகையாகும்.சித்தர் நூல்களில் வசியம் [வசிய மருந்து]மற்றும் அஞ்சனங்கள் [வசிய மை] போன்றவற்றில் பயன்படும் மூலப் பொருள்களில் ஒன்றுதான் இந்திரகோபம் ஆகும்.இதன் உடலின் மேற்புறத்தில் வெல்வெட் பட்டுதுணி போல் சிவப்பு நிறத்தில் இருக்கும்.இவை மழை காலங்களில் பகலில் செம்மண் பூமியில் உலாவும்.இந்த நேரத்தில் மட்டுமே சேகரிக்க முடியும்.

புதையல் காணும் மை செய்முறை :- ஓலைச்சுவடி முறைகள் 

இந்திரகோபம், பாதாள கருடனும், பாதாள மூலியும், பச்சை கற்ப்பூரம் கூட்டி கருக்கி செப்புச் சிமிளில் அடைத்துக் கொண்டு புத்துத்தேனில் குழைத்துப் போட்டால்  பூமியில் [பாதாளத்தில்] உள்ளதெல்லாம் தெரியும். நல்லெண்ணை யில் குழைத்துப் போட்டால் களவு போன பொருள்களை கண்டு பிடிக்கலாம்.

இந்திர கோபமும்,ஓரிதழ் தாமரையும், சிறிது பச்சை கற்பூரம் கூட்டி சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு நெற்றியில் பொட்டு போல் வைத்துக் கொண்டு செல்ல பிசாசுகள் அலறி ஓடும்.   

இதன் வீடியோ இந்த லின்க்கில் உள்ளது :


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
cell : 9865430235 – 8695455549

     



1 comment:

Ananth Sozhan said...

Great news.Are you able to make இந்திரகோபம் வசியம்??

பதிவுகளின் வகைகள்